Jul 25, 2010

காலனி பொய் வழக்கு விவகாரம், வேண்டுகோள்!

அரசியல் விளையாட்டால் அதிரையில் கடந்த பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டுவரும் "காலனி பொய்" வழக்கு பற்றிய செய்தி பொது நலன் கருதி வெளியிடப்படுகிறது.
                                 
முன்பு அந்த நாற்பது பேரில் நீங்களும் ஒருவரா? என்ற கட்டுரை "அதிரை எக்ஸ்பிரசில் வந்ததை சகோதர் மு.அ.ஹாலிது மூலம் அறிந்தேன்., இந்த வழக்கில் என்னைத்தான் முதல் குற்றவளியாக பொய்வழக்கில் சேர்த்தனர்., அதில் குற்றவளியாக புனையப்பட்ட அனைத்து அப்பாவி சகோதர்களையும் வழக்கிலிருந்து விடுவிக்க பலசிரமங்களுக்கு இடையில் பாடுபட்டேன் இதற்க்கு இறுதியாக செக்கடிமேட்டிலுள்ள தியாகி அப்பாஸ் ஹாஜியார் படிப்பகத்தை சேர்ந்த நண்பர்கள் குழுதான் முழு உதவி செய்தனர்., அல்ஹம்டுளில்லாஹ். அந்த உதவியின் மூலம் என்னுடன் வழக்கிற்கு ஒத்துழைத்த பதிமூன்று நபர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டனர். மீதமுள்ளவர்களுக்கும் தகவல் கொடுத்தும் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. பரவாயில்லை. இன்ஷா அல்லாஹ் இனி அவர்களுக்கு வாய்ப்புகள் அருகில் உள்ளது.

இனி அவர்கள் மேற்குறிப்பிட்ட வழக்கிலிருந்து விடுதலை பெறவிரும்பினால்., இன்ஷா அல்லாஹ் நான் முழுபொறுப்பையும் ஏற்று வழக்கை முடிவுக்கு கொண்டுவர தயாராக இருக்கின்றேன். இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் என்னுடைய வழக்கறிஞர் திரு நடராஜன் அவர்களே உடனடியாக 9443295916 என்ற எண்ணில் தொடர்புக்கொண்டு வழக்கிற்கு ஒத்துளைத்தால் போதும் அவரிடம் இதைப் பற்றி (வழக்கறிஞர் அவர்களுக்கு) தகவல் விரிவாக கொடுக்கப்பட்டு விட்டது.

தங்களின் அன்புள்ள

சி. நா. அ. சரபுதீன்

17 comments:

சரபுதீன் உங்களின் நல்ல எண்ணத்திற்கும், முயற்சிக்கும் பிரார்த்திப்பதுடன் வாழ்த்தவும் செய்கிறோம்.

இந்த பொய் வழக்கால் எத்தனை சகோதரர்களுடை படிப்பும், வாழ்க்கையும் அநியாயத்துக்கு வீணாகி போனது என்பது அதிரையில் உள்ள மக்களுக்கு, இயக்கங்கள நடத்துபவர்களுக்கும் தெரியும்.

நம்மூரில் ஒற்றுமையில்லாததால், எல்லா பொய் வழக்குகளும் இன்னும் நிலுவையில் உள்ளது.

சரபுதீன் காக்கா உங்களின் நல்ல எண்ணம் இன்ஷா அல்லாஹ் நிறைவேறும். துஆ செய்கிறோம்.

நமது ஊரில் ஒரு தெருவில் பிரச்னை என்றால் மற்ற தெருவாசிகளுக்கு அதில் ஒரு சந்தோசம் இந்த கேடு கெட்ட சந்தோசத்தை முதலில் நாம் களையவேண்டும் நம் அனைவரும் சகோதரர்கள் இதில் யாரும் உயர்தவன் தாழ்தவன் கிடையாது நம் அனைவரும் சமமானவர்கள் என்ற பக்குவம் வரவேண்டும்

அதிரை நிருபர் வாங்கிய அடி இப்பொழுது 10000....வாழ்த்துக்கள்....நான் தான் 10000வது அடியை ஓங்கி அடித்தேன்

நமது ஊரில் ஒரு தெருவில் பிரச்னை என்றால் மற்ற தெருவாசிகளுக்கு அதில் ஒரு சந்தோசம் இந்த கேடு கெட்ட சந்தோசத்தை முதலில் நாம் களையவேண்டும் நம் அனைவரும் சகோதரர்கள் இதில் யாரும் உயர்தவன் தாழ்தவன் கிடையாது நம் அனைவரும் சமமானவர்கள் என்ற பக்குவம் வரவேண்டும்.
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் மிகச்சரியான செய்தி.எல்லோரும் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளட்டும்.

Yasir says
அதிரை நிருபர் வாங்கிய அடி இப்பொழுது 10000....வாழ்த்துக்கள்....நான் தான் 10000வது அடியை ஓங்கி அடித்தேன்

நீங்கள் என்னம்மா ஓங்கி அடித்தாலும் பவர் கிடையாது காரணம் அங்கு பவர் கட்

shahameed said...

///நமது ஊரில் ஒரு தெருவில் பிரச்னை என்றால் மற்ற தெருவாசிகளுக்கு அதில் ஒரு சந்தோசம் இந்த கேடு கெட்ட சந்தோசத்தை முதலில் நாம் களையவேண்டும் நம் அனைவரும் சகோதரர்கள் இதில் யாரும் உயர்தவன் தாழ்தவன் கிடையாது நம் அனைவரும் சமமானவர்கள் என்ற பக்குவம் வரவேண்டும்///

மேற்குறிப்பிட்ட கருத்து இங்கு தேவையற்றது எனக்கருதுகிறேன்

சகோதர் சரபுதீன் அவர்கள் முயற்சியால் விடுவிக்கப்
பட்டவர்களில் 13 நபர்களில் அதிகம் பல தெருக்களை
சார்ந்தவர்கள்தான் ., மீதமுள்ளவர்களும் அப்படியே,
சந்தேகம் இருந்தால் விவரம் தரப்படும்
ஊர்நலம் மற்றும் சமுதாய நலன் அடிப்படையில்
எடுக்கப் படும் மூயற்சி இது.
முதலில் கருத்திடல் மூலமாவது இன்ஷாஅல்லாஹ் ஒற்றுமையாடைவோம்.

உ.ஒ.: எந்த மாற்றுக் கருத்துமில்லை, சகோ.சரபுதீன் முயற்சி நன்கு அறியப்பட்டதே, சாகுல் சொல்லவந்ததில் தவறேதும் இல்லை.

வேண்டுகோள் ! ஒற்றுமை கருதி இதுசார்பாக பின்னூட்டம் தொடராமல் மடக்கிக் கொண்டால் நலமே(விரும்பித்தான்).

அபுஇபுறாஹிம் says

உ.ஒ.: எந்த மாற்றுக் கருத்துமில்லை, சகோ.சரபுதீன் முயற்சி நன்கு அறியப்பட்டதே, சாகுல் சொல்லவந்ததில் தவறேதும் இல்லை.

வேண்டுகோள் ! ஒற்றுமை கருதி இதுசார்பாக பின்னூட்டம் தொடராமல் மடக்கிக் கொண்டால் நலமே(விரும்பித்தான்).

நான் சரபுதீன் அவர்களை குற்றம் சொல்ல வரவில்லை (அவரை யார் என்று எனக்கு தெரியாது ) ஊரின் யதார்த்தத்தை சொன்னேன் (உண்மை கசக்கும் )


OK BROTHER

சாஹுல் கனவா சமையல் செய்துகிட்டு இருக்கும் போது இப்படி ஒரு அஜினாமோட்டோ மேட்டரை போட்டரே என்னதான் செய்றது ! சொல்லுங்களேன்..

முன்பு இருந்தது போல் தெருப்பிரிவினைகள் இப்போது அதிரையில் அதிகம் இல்லை. இருந்தாலும் நாம் அனைவரும் ஒரு பொதுவான கருத்தோட்டத்தை உருவாக்க முயற்சி செய்யலாமே.

சகோதரர் சாஹுல் நீங்கள் நல்ல எண்ணத்தில் சொல்லிய கருத்தில் தவறில்லை. ஏன் அடுத்த விட்டில் குடும்ப சன்டை என்றாலும் சில பக்கத்து வீட்டுக்காரர்கள் சந்தோசம் அடைகிறார்கள் அவர்களின் சொந்தங்களாக இருந்தாலும் சரியே. நம் மக்கள் இன்னும் திருந்த வேண்டியுள்ளது.

நம்மவர்களிடம் ஒற்றுமை ஏற்படுத்த படைத்த அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

அழகா கனவு கண்டு கனவா சமைகிறப்போ யாருப்பா அது அஜினாமோட்டோ வை அல்லி போட்டது. (.crown ) எங்கே ஆளை காணோம் பிறை பார்க்க இப்வே கிளம்பியாச்சா நாங்கதாம்ப (சவுதி) பிறை பார்த்து சொல்லணும்

அதெல்லாம் (வெறும்)கனவா !? பொற பாக்கப் போன இந்த க்ரவுன் புள்ள இன்னுமா வரல... தலப் பொறைக்கு என்ன கலர் சட்டை ? கட்டம் போட்ட வேட்டியா ? வெள்ளே வேட்டியா ? கொலப்பத்துல இருக்குதுமா அந்த புள்ள !

அழகா கனவு கண்டு கனவா சமைகிறப்போ யாருப்பா அது அஜினாமோட்டோ வை அல்லி போட்டது. (.crown ) எங்கே ஆளை காணோம் பிறை பார்க்க இப்வே கிளம்பியாச்சா நாங்கதாம்ப (சவுதி) பிறை பார்த்து சொல்லணும்
--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.எல்லாரும் என்ன சொல்(எழுது)றாங்கன்னு ஒளிஞ்சிருந்து பாத்துக்கிட்டு இருந்தேன்.
நாங்கதாம்ப (சவுதி) பிறை பார்த்து சொல்லணும்.
(எங்க நாசீபூ பி(ற)றை பார்த்துத்தெரிந்துகொள்ளனும்

அதெல்லாம் (வெறும்)கனவா !? பொற பாக்கப் போன இந்த க்ரவுன் புள்ள இன்னுமா வரல... தலப் பொறைக்கு என்ன கலர் சட்டை ? கட்டம் போட்ட வேட்டியா ? வெள்ளே வேட்டியா ? கொலப்பத்துல இருக்குதுமா அந்த புள்ள !
--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் எப்பவும் வெள்ள வேட்டித்தான்.

//crown says
28/07/10 2:59 AM
This post has been removed by the author.//
உண்டியல்ல காசு போட்டா எடுக்க கூடாது என்னா சரியா ! :)

FOLLOW UP : யாரேனும் மேற்குறிப்பிட்ட வேண்டுகோலின்படி பாதிக்கப் பட்டவர்கள் தொடர்பு கொண்டார்களா ? அல்லது வேறு ஏதேனும் விபரங்கள் தெரிந்தவர்கள் பின்னுடமிடலாமே...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More