Welcome to our website. Neque porro quisquam est qui dolorem ipsum dolor.

Lorem ipsum eu usu assum liberavisse, ut munere praesent complectitur mea. Sit an option maiorum principes. Ne per probo magna idque, est veniam exerci appareat no. Sit at amet propriae intellegebat, natum iusto forensibus duo ut. Pro hinc aperiri fabulas ut, probo tractatos euripidis an vis, ignota oblique.

Ad ius munere soluta deterruisset, quot veri id vim, te vel bonorum ornatus persequeris. Maecenas ornare tortor. Donec sed tellus eget sapien fringilla nonummy. Mauris a ante. Suspendisse quam sem, consequat at, commodo vitae, feugiat in, nunc. Morbi imperdiet augue quis tellus.




Dec 8, 2010

சீரழிக்கும் செல்போன்-இன்டர்நெட்!

இரண்டாம் உலகப்போருக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். இங்கிலாந்துப் பிரதமராக ஆவதற்கு முன்பாக, வின்ஸ்டன் சர்ச்சில் சாதாரண பிரிட்டிஷ் டூரிஸ்ட்டாகச் சென்னை வந்து, அண்ணா சாலையில் முன்பு இருந்த அரசு வளாக (கவர்மெண்ட் எட்டேட்ஸ்) அட்மிராலிட்டிக் கட்டிடத்தில் ஓர் அறையில் தங்கியிருந்தாராம். அவருக்கு அடுத்த அறையில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிலிட்ரி கர்னல் ஒருவர் தங்கி இருந்தாராம். அப்போது கர்னல் போனில் லண்டனுக்குச் சப்தம் போட்டுப் பேசினாராம். அவர் பேசிய சப்தம் கேட்டு, சர்ச்சில் அவருடைய அறையை விட்டு வெளியே வந்து, அங்கிருந்த காவலாளியைக் கூப்பிட்டு, அந்த அறையில் தங்கிருந்தவர் யார் எனத் தெரிந்து கொண்டு காவலாளியிடம், ‘நீங்கள் போய் உங்கள் கர்னலிடம் சொல்லுங்கள்;: அவருடன் பேசுகிறவர் லண்டனில் இருக்கிறார். அது தெரியாமல் கர்னல் நேரில் இருப்பது போன்று சப்தம் போடுகிறார்" என்று சொன்னாராம்.

இதனை ஏன் குறிப்பிடுகிறேனென்றால், முன்பு இருந்த தொலைபேசி அடுத்தவருக்குத் தொல்லை பேசியாக இருந்ததாம். ஆனால் இன்றைய நவீன விஞ்ஞான உலகத்தில் தொலைபேசிக்கே வேலையில்லாது கைபேசி வந்துவிட்டது. ஆனால் அதே தொலைபேசி இளசுகளைச் சீரழிக்கும் கைபேசியாக மாறிவிட்டதுதான், இன்றைய சமுதாயத்திற்குப் பெரிய தலைவலியாக மாறி உள்ளது.

செல்போன் வந்த பிறகு, வயர் இணைப்பிற்கு முக்கியத்துவம் இல்லாத நிலைமை வந்துவிட்டது. சுhதாரணக் கூலி முதல் கோமான் வரை, சட்டைப் பையில் கொண்டு செல்லும் அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டது ஆச்சரிமில்லைதான். செல்போனின் முக்கியச் செயல்பாடுகளைத் தெரியாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். இருந்தாலும், சில முக்கியச் செயல்பாடுகளை இங்கே சொல்லலாம் என நினைக்கின்றேன்: 1) அட்ரஸ் கையேடு 2) அழைப்பவர் பட்டியல் 3) வீடியோ பங்கிடுதல் 4) படம் எடுத்தல் 5) கான்ஃபரன்ஸ் நடத்துதல் 6) மெஸேஜ் அனுப்புதல் 7) எல்லோ பேஜ் என்ற வர்த்தக விளம்பரம் 8) டி.வி 9) இசை 10) செய்தி ஒளிபரப்பு 11) மொபைல் பேங்கிங்க் 12) தட்ப வெப்ப நிலையறிதல் 13) இன்டர்நெட் 14) நோட் புத்தகம் 15) உலக மணி 16) உலக நாணயம் 17) உலகத் தேதி 19) எழுப்பும் மணி 20) கால்க்குலேட்டர் 21) புளு டூத் 22) இடங்களை எளிதாகக் கண்டு பிடிக்கும் ஜி.பி.எஸ், ஜி.பி.ஆர்.எஸ் - போன்றவை.

மேற்கூறிய உபயோகங்கள் சில வகைதாம். இன்னும் அதன் பயன்பாடுகள் உலகம் விசாலமானது என்பதை மாற்றி, உலகம் கைக்குள் அடங்கியிருக்கிறது என்று சொல்லுமளவிற்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

1964 ஆம் ஆண்டு மன்னார் வளைகுடாவில் புயல் ஏற்பட்டுப் பாம்பன் பாலத்தில் சென்ற ராமேஸ்வரம் ரயில் அடித்துச் செல்லப்பட்டு, நூற்றுக் கணக்கானோர் இறந்தனர். தனுஷ்கோடித் தீவுக்கு முற்றிலும் ராமேஸ்வரத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அப்போது அந்தத் தீவில் இருந்த பெரும்பாலோர் இறந்துவிட்டனர். அந்தச் சம்பவத்தினை அந்தத் தீவிலிருந்த டெலக்கிராப் ஆப்பரேட்டர் மோர்ஸ் தொடர்பு மூலம் சென்னைக்குத் தகவல் அனுப்பினார். அதனை வைத்துத்தான் உடனே மீட்பு நடவடிக்கை எடுக்கவும் முடிந்தது. அந்தச் சம்பவம், நான் பி.யு.சி மாணவனாக இருந்தபோது நடந்தது.

தொலைத் தொடர்பில் ஏற்பட்ட 'சேட்லைட்" வளர்ச்சி அபாரமானது என்பதை இரண்டு சம்பவங்கள் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன். ஒன்று: சிலி நாட்டில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் 2000 அடிக்குக் கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் விபத்து ஏற்பட்டுச் சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை, ஒரு துளை போட்டு அதில் ஒரு செல்போனைச் செலுத்தித் தெரிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், அவர்கள் உயிருடன் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீட்கும் வரை வீடியோ கான்ஃபரன்ஸிலும் தங்கள் குடும்பத்தாருடன் பேசி மகிழ்ந்ததை அனைவரும் பார்த்திருப்பார்கள்.

அதே போன்று, விண்வெளியில் பயணம் செய்த கல்பணா சவ்லா போன்ற வீரர்கள் தங்கள் சாதனை முடிந்து, வாயு மண்டலத்தினைத் தொடும்வரை தரைக் கட்டுப்பாட்டுடன் பேசிக் கொண்டு வந்ததை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதன் பின்புதான் அவர்கள் விபத்தில் மரித்தார்கள். ஆகவே, தொலைத் தொடர்பு வளர்ச்சி பரிணாமமானது என்பதை எல்லோரும் அறிவர்.

இந்தியா பொருளாதாரத்தில் 8.9 சதவீத வளர்ச்சியடைந்து, வளரும் நாடு என்ற நிலையிலிருந்து - அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சமீபத்தில் இந்திய நாட்டுக்கு வருகை தந்தபோது சொல்லியது போல - வளர்ந்த நாடாகத் திகழ்கிறது. முன்பெல்லாம் கம்பஞ்சோறும், கேப்பைக்களியும், குருனைக் கஞ்சியுடன் பச்சை மிளகாய், வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு சாப்பிட்ட காலம் போய், இன்று வயிறாறச் சத்துள்ள உணவு சாப்பிடும் தரத்திற்கு உயர்ந்துள்ளோம். காடுகளிலும் முள் செடிகளிலும் வெறுங்காலுடன் பள்ளிக்குச் சென்ற நாம், இன்று விதவிதமாக செருப்புகள், ஷ_க்கள் அனிந்து, அரசே இலவசமாகக் கொடுத்த சைக்கிளில் பள்ளிக்குச் சென்று இலவசமாகப் பள்ளிப் படிப்பினை முடிக்க உதவும் காலமாக இருக்கிறது. உலகில் செல்வத்தில் மிளிரும் நாடாக இந்தியா மாறி வருகிறது என்றால் மறுக்க முடியாது.

பணம் எங்கே இருக்கின்றதோ, அங்கே மகழ்ச்சி தாண்டவமாடும். ஆனால் அந்த மகிழ்ச்சியே, குடும்பத்தின் எதிரியாகிவிடும் என்பது கிராமத்துப் பழமொழி. தங்கள் ஆண், பெண் குழந்தைகள் சிரமம் பாராது வளரப் பெற்றோர் வெயில், மழையென்று யோசிக்காது உழைக்கின்றனர். பிள்ளைகள் படிப்பிற்காகக் கம்ப்யூட்டர், செல்போன், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் என்று வாங்கிக் கொடுக்கின்றனர். சிலர் தம் செல்லச் சிறு பிள்ளைகளுக்கும் செல்போனை விளையாட்டு பொம்மை போல வாங்கிக் கொடுக்கின்றனர். வீட்டிலே 'இன்டர்நெட்" வசதியும் செய்து கொடுக்கின்றனர். அதன் விளைவுதான், வில்லங்கம் வீட்டிற்கே வந்த கதையாகிறது.

எட்டு வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர் கம்ப்யூட்டரில் ஆர்குட், டிவிட்டர், ஃபேஸ்புக் என்ற வலைத் தளங்களுக்குத் தங்கு தடையின்றிச் சென்று, பல்வேறு பால் வித்தியாசமுள்ள புது நண்பர்களை உருவாக்கிக் கொள்கின்றனர். அந்த இன்டர்நெட்டில் ஆபாச இணைய தளம், ‘பாப் அப்’ தெரியும் படிச் செய்து, இள மனதினைக் கெடுக்கிறார்கள். அது போன்று செல்போனில் காதல் பேச்சுகள், தனிமையில் முத்தமிடுதல், ஏன் பாலியல் தொடர்புகளைக் கூடக் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். பெற்றோரும் அரசும் தரமான பள்ளி, கல்லூரிப் படிப்பினை மாணவர்களுக்குக் கொடுக்க ஆசைப்படுகின்றது. ஆனால் மாணவர்கள் சிலர் படுகுழி என்று தெரிந்தும், அதில் விழும் செய்திகளை நாம் படிக்கின்றோம்;;;. அன்றாட வாழ்க்கையிலும் கேள்விப்படுகிறோம்.

பல்வேறு செய்திகள் இருந்தாலும், இரண்டு உதாரணங்களை மட்டும் சொல்லலாம் என நினைக்கின்றேன்: கோவை மாவட்டத்தில் ஒன்பதாவது படித்த மூன்று மாணவிகளைப் பள்ளியிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு காணவில்லை. அவர்கள் காணாதது சம்பந்தமாக காவல் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சமீபத்தில் அந்த மூன்று மாணவிகளும் பெங்க@ரில் இருப்பதாக அறிந்து, அவர்களைச் சென்று பார்த்தபோது, அவர்கள் மூவரில் ஒருவர் திருமணமாகி ஆறு மாதக் குழந்தையுடன் இருப்பதும், மற்றும் இருவர் இரண்டு இடங்களில் வீட்டு வேலை செய்வதாகவும் தெரிந்தது. தன் தோழியின் காதலுக்காக மற்ற இரண்டு மாணவிகளும் தங்கள் படிப்பினைப் பாழடித்து, பாலுட்டித் தாலாட்டிய பெற்றோரை மறந்து, வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால், எந்த அளவிற்குக் காதல் கண்ணை மறைத்துவிட்டது என்பதைப் பாருங்களேன்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த இரண்டு மாணவர்களில் ஒரு மாணவர் கஸ்தூரி என்ற பள்ளி மாணவியை ஒரு தலைப் பட்சமாகக் காதலித்தாராம். அவருக்கு, அவருடைய நண்பர் உதவி செய்தாராம். ஆனால் அந்தப் பள்ளி மாணவி அதனை வெறுத்தாராம். அவர்களின் முறையில்லாச் செயலினை ஊர்ப் பெரியவர் சுவாமிநாதன் தட்டிக் கேட்டாராம். ஆதனால், அந்தப் பள்ளி மாணவியையும் அந்தப் பெரியவரையும் பலி வாங்க இரண்டு மாணவர்களும் இரண்டு செல்போன் சார்ஜர்கள் வாங்கி, அதில் டெட்டனேட்டர்களைப் பொருத்தி, மாணவி மற்றும் ஊர்ப் பெரியவர் வீடுகளின் முன்பாக இரவு வீசி விட்டார்களாம். காலையில் அதனை அறியாத அந்த மாணவியும் பெரியவரும் அவர்கள் வீட்டு முன்பு கிடந்த சார்ஜரை எடுத்து, செல்போனில் கனெக்ஷன் கொடுத்து பிளக்கில் மாட்டும்போது, அவைகள் வெடித்து, அவர்கள் இருவருக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தது, சமீபத்தியப் பத்திரிகைச் செய்தியாகும்.

இளசுகளைக் கெடுப்பதில் மூல காரணமாக உள்ளது, டி.வி. அடுத்தது, சினிமா. டி.வி.யில் ஜாக்பாட்; ஜட்ஜாக வரும் நடிகை முதுகு தெரியும் அளவிற்கு உடை அணிந்து வருவதும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜாக வரும் நடிகைகள் பாத்ரூம் உடையோ என்று எண்ணும் அளவிற்கு அரைகுறை ஆடை உடுத்தி வருவதும், பள்ளிப் பருவத்திலேயே காதல் செய்வது போன்ற சினிமா பார்ப்பதும், ‘கல்யாணமே கட்டிக்கில்லாமல் ஓடிப்போகலாமா’ என்பது போன்ற சினிமாப் பாட்டுக்களைக் கேட்பதும் இளசுகளின் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் நிகழ்ச்சியாக உள்ளது என்றால், யாரும் மறுக்க முடியாது. அதுவும், வசதியுள்ள பிள்ளைகள் உண்ணும் சத்துள்ள உணவு, அவர்களின் உடலில் ஒரு விதமான ரசாயணக் கலவையை ஏற்படுத்திக் கிளர்ச்சிpயனத் தூண்ட மூல காரணமாகவும் உள்ளது. அதனாலே, அவர்கள் பெற்றோர்கள் இல்லாமல் தங்களுடைய வாழ்க்கையினைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் தலைகளில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கின்றனர்.

கிராமத்தில் ஒரு பழமொழி, ‘முல்லைச் செடிக்குக் கள்ளிச் செடி என்று தெரிவதில்லை" என்று. முல்லைச் செடி போன்ற இளம் வயதினர் அறியாத பருவத்திலே, கள்ளிச் செடி என்ற காதல் மேல் நாட்டம் கொள்கின்றனர். அதற்கு உதவியாக, செல்போனும் இன்டர்நெட்டும் இருக்கின்றன.

ஆனால் அவைகளின் வாசனையே இல்லாத மாணவர்கள், தங்கள் வாழ்க்கையில் சாதனை படைக்கிறார்கள் என்பதற்குச் சில உதாரணங்களைக் கூற ஆசைப்படுகிறேன்:

1) சென்ற பிளஸ் 2 பரீட்சையில் முதல் ரேங்க் மற்றும் இரண்டாம் ரேங்க் வாங்கிய தூத்துக்குடியைச் சார்ந்த பாண்டியன், நாமக்கல்லைச் சார்ந்த சந்தியா, ராஜபாளையத்தைச் சார்ந்த பிரக்ஷனா ஆகியோர் டி.வியே பார்ப்பதில்லையாம்.

2) பேசுபவர்களின் உதடு அசைவை வைத்துப் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட திருவல்லிக்கேனியினைச் சார்ந்த கார் டிரைவர் மகள் பாத்திமா, பிளஸ் 2 தேர்வில் காது கேளாதவர் பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் டி.வியே பார்ப்பதில்லை.

3) கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்க்கடையைச் சார்ந்த சென்னை எஸ்.எஸ்.என். இன்ஜினீரியங் கல்லூரி மாணவி மாஷா, மலைக்க வைக்குமளவிற்குச் சாதனை படைத்து, எட்டு புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலகர்த்தாவாகி, ஜனாதிபதியிடம் சான்றிதழ் வாங்கியுள்ளார். அவர் டி.வி. பார்ப்பதில்லையாம்.

செல்போன்,; திருமணமாகாத சிறுவர் சிறுமிகளின் மனங்களைக் கெடுக்கும் சாதனமாக இருக்கிறது என்று அறிந்து, உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 'லாங்" என்ற கிராமத்தில், ஊர்ப் பஞ்சாயத்; கூடி, திருமணமாகாத இளம் பெண்கள் செல்போன் உபயோகிக்கத் தடை விதித்திருக்கிறது என்றால், பாருங்களேன். எந்த அளவிற்கு அந்த கிராமத்தில், செல்போன்கள் வளரும் பெண்களின் வாழ்க்கைகளைச் சீரழித்திருக்குமென்று!

செல்போன், இன்டர்நெட் துஷ்பிரயோகங்களைத் தடுக்கச் சில யோசனைகள்:

1) பள்ளி மாணவ, மாணவியருக்குக் கண்டிப்பாக செல்போன் வழங்கக் கூடாது. அப்படி வழங்குவதாக இருந்தால், அவசர அழைப்புகளுக்கு மட்டுமே அதனை உபயோகிக்கும் அளவிற்கு முன்னேற்பாடுகள் செய்து வாங்க வேண்டும்.

2) கல்லூரி மாணவியர் மாணவர்களுக்குப் போஸ்ட் பெய்டு செல்போன் சேவை வழங்கலாம். அவைகளின் கால் சார்ஜ், எஸ்.எம்.எஸ் சார்ஜ் அட்டவணை பில்லுடன் சேர்ந்து வருமாறு செய்து, பெற்றோர் அதனைக் கண்காணிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அண்ணா யுனிவர்சிட்டித் துணை வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் யுனிவர்சிட்டி வளாகத்தில் செல்போன் பயன்படுத்தத் தடை விதித்திருந்தார். முதலில் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள்கூட, பின்பு அதன் முக்கியத்துவம் அறிந்து, அவருடைய உத்திரவினைப் பின்பற்றிப் பல கல்லூரிகளில் தடையும் விதித்தனர். ஆகவே, பெற்றோர்கள் பிள்ளைகளின் செல்போன் பேச்சுக்களைக் கண்காணிப்பதை அவர்கள் முதலில் எதிர்க்கத்தான் செய்வார்கள். அதற்காகப் பிள்ளைகளைப் படுகுழுpயில் விழ அனுமதிக்கலாமா? பெற்றோர்கள் மனந்தளராமல், எது தன் பிள்ளைக்கு உகந்தது என்பதைத்; தீர்மானிக்க வேண்டும்.

3) இன்டர்நெட்டில் என்ன செய்திகளைப் பிள்ளைகள் பரிமாறிக் கொள்கிறார்கள் என்பதை, படித்த பெற்றோர் கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்தால் கண்டு பிடிக்கலாம். இன்னும் பெற்றோருக்குத் தெரியாமல் வரும் மெயில்களைப் பிள்ளைகள் நீக்கினால், அப்படி நீக்கப்பட்ட பகுதி, டிரேஸ் பகுதியில் இருக்கும். அதனை இயக்கித் தெரிந்து கொள்ளலாம்.

4) தங்கள் மகன், மகள்களைப் படிப்பதற்காக விடுதியில் விடும்போது, அவர்களைத் தண்ணீர் தெளித்து விடாமல், அவர்கள் இருக்கும் விடுதிகளுக்குச் சென்று, அவர்களின் மேற்பார்வையாளர்களிடம் பிள்ளைகள் நடத்தையினைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

5) செல்போனில் வரும் தெரியாத மிஸ்டு கால்களுக்கு நிச்சயமாக பதில் சொல்லக் கூடாது. அதுவும், பெண்கள் கண்டிப்பாக பதில் சொல்லக் கூடாது.

6) ஆண் துணை இல்லாத பெண்களுக்கு எமன்போல சிலர் வந்து, அவர்களிடம் பழக்கத்தினை ஏற்படுத்தி, அவர்கள் உயிருக்கும் கற்புக்கும் உலை வைப்பார்கள். உதாரணத்திற்கு: ஆள் துணையில்லாத இராமநாதபுரம் கேணிக்ரையைச் சார்ந்த மலேசியாவிலிருந்து வந்த ஆதிலா பேகம் என்ற பெண் ஒருத்தி சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குவதிற்காக ஒரு ஆணுடைய துணையினை நாடி, அதுவே எமனாக முடிந்து, அந்த நபர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து அவளையும், அவளுடைய அழகான ஆண் பெண் குழந்தைகளைக் கடத்தி, வாடிப்பட்டி அருகே கொலையும் செய்துவிட்ட நவம்பர் மாதச் செய்தி, நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

7) திருமணத்திற்கு நிச்சயம் வைத்து, திருமணம் நடக்கச் சில நாட்கள் இருக்கும் போது, ஆணும் பெண்ணும் தங்களுடைய செல்போனிலோ இண்டர்நெட்டிலோ தனிமையினை படமாகவோ வீடியோவாகவோ எடுக்க அனுமதிக்கக் கூடாது. அது போன்று ஒரு நிகழ்ச்சியில் மணப்பெண் தன்னுடைய நிர்வாணமான படத்தினை, நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைதானே என்று அனுப்ப, அது பிற்காலத்தில் திருமணம் பாதியில் முறிந்து, அந்த போட்டோவை வைத்தே மாப்பிள்ளை வீட்டார் அந்தப் பெண்ணைக் கேவலமாகப் பேசியதும் சமீபத்திய செய்தியாக வந்தது. ஆகவே ஆணும் பெண்ணும் காதல் கத்தரிக்காய் என்று வேற்று ஆணுடன் சுற்றலும், சேர்ந்து நெருக்கமாக இருந்து போட்டோ வீடியோ எடுத்தலும்; கூடாது.

ஆகவே, விஞ்ஞான வளர்ச்சிச் சாதனங்களான செல்போன், இன்டர்நெட் போன்றவைகளால் நம் செல்வங்கள் சீரழிவதை, பெற்றோரும் உற்றாரும் உடன் பிறந்தோரும் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

-டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்டி, ஐ.பீ.எஸ்(ஓ)

தகவல்: அதிரை அஹ்மது

அதிரையில் அழகிய மழைக்காலம்












ஆண்டவனின் அருளினது சாட்சி- நம்
அதிரையிலே அடைமழையின் ஆட்சி- பல
வேண்டுதலின் வினைப்பயனாய் வந்திருக்கும் வான்மழையே
வருக-வளம்-தருக.

கார்மேகம் நீர்முடிச்சு அவிழ்க்கும்-அந்த
கடல்முழுதும் கொண்டுவந்து கவிழ்க்கும்-நம்
ஊர்மேலும் வளம் பெறவே ஊற்றுக்கள் நீர்பெறவே
பெய்யும்-மழை-செய்யும்.

வீட்டின்முன் சாலைகளில் தேங்கும்-நீரால்
விரல்நடுவே சேற்றுப்புண் வீங்கும்-பெரும்
காட்டாற்று வெள்ளமென கரைபுறண்டு ஓடிவரும்
தண்ணீர்-மேக-கண்ணீர்.

அன்றாடம் காய்ச்சிகளுக்கு அல்லல்-மழையைக்
கொண்டாடும் குழந்தைகளுக்கோ துள்ளல்-சோலை
வண்டாடும் மலர்செடிக்கும், வாடி நிற்கும் மரத்திற்கும்
வரமாம்-உதவிக்-கரமாம்.

கத்தியுடன் கப்பலென்று சொல்வான் - தம்பி
கடல் எனவே மழைநீரைக் கொள்வான்- பல
உத்தியுடன் செய்துவந்து உவகையுடன் அதைநீரில்
விடுவான்-சந்தோசப்-படுவான்.

இயல்புநிலை பாதிக்கும் காலம்-இங்கு
இலைநுனியில் நீர்சொட்டும் கோலம்-வீசும்
புயல்மழையின் தாக்கத்தில் புழுபோலே தேகம்
சுருங்கும்-போர்வையும்-உறங்கும்.

படகுவழி படையெடுப்பும் இல்லை-கடல்
வலைவிரிப்பும் மீன்பிடிப்பும் இல்லை-நம்
கடைத்தெருவில் ஈயாடும், கறிக்கடையும் வெறிச்சோடிப்
போகும்-கருவாடு-வீட்டில்வேகும்.

மழைவருகை எதிர்பார்த்து அன்றே-வடகம்
முதல் வற்றல்வரை என்றே- வெயில்
தலைபிளக்கும் நாட்களிலே தயாரிப்பு செய்திட்ட
முறுக்கும்-வீட்டில்-இருக்கும்.

செக்கடியும் ஆலடியும் ததும்பும்-அந்த
செடியனிலும் மழைநீரே ஒதுங்கும்-என்றாலும்
அக்குளம் முழுவதிலும் அள்ளிவந்த குப்பைகளின்
கதம்பம்-மனம்-வெதும்பும்.

இப்படி நாம் எழுதிடலாம் நிறைய-ஊரில்
இருந்திட்ட நாட்கள்தான் குறைய-ஆம்
எப்படியோ நான்ரசித்த நல்மழையை நானிங்கு
பகிர்ந்தேன்-உள்ளம்-மகிழ்ந்தேன்...

-- அதிரை என்.ஷஃபாத்

Dec 7, 2010

முஹர்ரம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

வல்ல அல்லாஹ்வின் பேரருளால் ஹிஜ்ரி வருடம் 1431 முடிந்து ஹிஜ்ரி 1432ல் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தில் நாம் இருக்கிறோம். இந்த மாதத்தின் சிறப்புகளை பார்ப்பதற்கு முன் இந்த உலகத்தின் புத்தாண்டு தினங்களின் கொண்டாட்டத்தை பார்ப்போம்.

ஒவ்வொரு மதத்திற்கும், நாட்டிற்கும் கொண்டாடும் முறைகள் மாறுபட்டிருக்கும். ஆனால் எல்லா கொண்டாட்டங்களிலும் ஒட்டு மொத்தமாக மூட நம்பிக்கையின் பிறப்பிடமாக இவர்களின் புத்தாண்டு ஆரம்பிப்பதை தெளிவாக பார்க்கலாம்.

புதிய ஆண்டு பிறப்பதற்கு முதல் நாளும், இரவும், புதிய ஆண்டின் துவக்க நாளும் இந்த உலகத்தில் உள்ளவர்கள் கொண்டாடும் கொண்டாட்டங்கள், வரவேற்கும் முறைகளைப்பார்த்தால் பகுத்தறிவுக்கு பொருந்தாமல் இருப்பதை நன்கு அறிய முடியும். கேளிக்கையும், வான வேடிக்கையும், அநாச்சாரமான காரியங்களும், மூட நம்பிக்கைகளும் சேர்ந்த கலவையாக இவர்களின் புத்தாண்டு வரவேற்பு இருக்கும். இந்த நாளில் மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்போம் என்பதுபோன்ற பலவிதமான மூட பழக்கங்களை காணலாம். மேலும் இந்நாளில் இவர்கள் பயன்படுத்தும் பொருள்களால் காற்று மாசுபடுவதோடு பயன்படுத்தும் தண்ணீரையும் மாசுபடுத்தி தெருவெங்கும் குப்பைக்காடாக மாற்றிவிடுவார்கள்.

வல்ல அல்லாஹ்வின் தூய மார்க்கமான இஸ்லாத்தில் எந்தவிதமான அநாச்சாரங்கள், ஆராவாரம், மூட பழக்கங்கள் எதுவும் இல்லாமல் அழகான முறையில் ஹிஜ்ரி ஆரம்பிப்பதே தனிச்சிறப்பாகவே இருக்கிறது. (முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்யும் பழக்கங்களை கணக்கில் சேர்க்க வேண்டாம். வல்ல அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை தரட்டும்). ஆங்கில மாதங்களின் பெயர்கள் நமக்கு நன்றாக தெரியும். ஆனால் நமது இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள் அதிகம் பேருக்கு ஞாபகத்தில் இருக்காது.

இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள்:
முஹர்ரம், ஸபர், ரபியுல் அவ்வல், ரபியுல் ஆகிர், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமலான், ஷவ்வால், துல்-கயிதா, துல்-ஹஜ்.

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். (அல்குர்ஆன் 9:36)

நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிய நிகழ்ச்சியை (ஹிஜ்ரத்தை) அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களின் வருடக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. எனவே இதனை ஹிஜ்ரி என்று அழைக்கின்றனர். ஹிஜ்ரி வருடத்தின் முதல் மாதம் முஹர்ரம் ஆகும். முஹர்ரம் என்பதற்குப் புனிதமானது - புனிதமிக்கது என்று பொருள். இதன் புனிதத்திற்குச் சான்றாக பின்வரும் நபிமொழிகள் அமைந்திருப்பதைக் காணலாம்.

ரமளானுக்குப் பின் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். ஃபர்ளான (கடமையான) தொழுகைக்குப் பின் மிக்க சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபுஹூரைரா(ரலி), நூல்: முஸ்லிம், அஹமது)

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷுரா(பத்தாம்) தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அவர்களை நோக்கி நபி(ஸல்) அவர்கள், நீங்கள் நோன்பு நோற்கும் இந்நாளின் சிறப்பு என்ன? என்று கேட்டார்கள். யூதர்கள் : இது ஒரு புனிதமான நாள். இன்றுதான் மூஸா(அலை) அவர்களையும், அவரது சமூகத்தினரையும் காப்பாற்றி (அவர்களது) விரோதிகளான ஃபிர்அவ்ன், அவனது கூட்டத்தினரையும் அல்லாஹ் நீரில் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நாங்கள் நோன்பு வைக்கிறோம். அதற்கு நபி(ஸல்)அவர்கள் மூஸா(அலை) அவர்களின் விஷயத்தில் உங்களைவிட நானே அதிகம் உரிமையும், கடமையுணர்வும், தகுதியும் உடையவன் எனக் கூறி விட்டுத் தாமும் நோன்பு நோற்று, பிறரையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி,முஸ்லிம்,அஹ்மத்).

இந்த நபிமொழி மூலம் முஹர்ரம் ஆஷுரா(பத்தாம்) தினத்தன்று நோன்பு நோற்பது கட்டயாக் கடமை போலத் தெரியலாம். ஆனால் இது கட்டயாக் கடமையல்ல. காரணம் நபி(ஸல்)அவர்கள் மதீனா வந்த ஆரம்பத்தில் ரமலானின் கட்டாய (ஃபர்ளான) நோன்பு கடமையாக்கப்படாத போது நிகழ்ந்த நிகழ்ச்சியாகும் இது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்பு இந்த ஆஷுரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை. இதனைக் கீழ்காணும் நபிமொழி தெளிவுபடுத்துவதைக் காணலாம்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஆஷுரா தினத்தின் நோன்பு நோற்கக் கட்டளையிட்டிருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டபின், விரும்பியவர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும். விரும்பியவர்கள் விட்டு விடலாம் எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர்: முஆவியா(ரலி) மற்றும் ஆயிஷா(ரலி) அவர்கள். நூல்: புகாரி, முஸ்லிம், முஸ்னத்-அஹ்மத்).

ஆஷுரா (பத்தாம்)தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர் என நபி(ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறிய போது, அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் மறுவருடம் இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: முஸ்லிம், அபூதாவூத், அஹ்மது).

இந்த நபிமொழியின் மூலம் நாம் முஹரம் மாதம் 9,10 நாட்களில் நோன்பு நோற்பது நபி வழி(சுன்னத்) என்பதை அறியலாம். இவையன்றி வேறு ஏதும் விஷேஷ வணக்கங்களிலிருப்பதாக நாம் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ காண முடியவில்லை. திருக்குர்ஆனின் ஆணைப்படி நோன்பு நோற்பதே நாம் ஹிஜ்ரி வருடத்தை வரவேற்கும் விதமாகும். முஹர்ரம் மாதத்தின் வணக்கங்களாகும்.

ஆஷூரா நோன்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, சென்ற வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)

முஹர்ரம் ஆஷுரா(பத்தாம்) நாளன்று தான் நபி(ஸல்)அவர்களின் அருமைப் பேரர் ஹுஸைன்(ரலி) அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்டார்கள் என்பது ஒரு சோகமான சரித்திர நிகழ்ச்சியாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களில் ஒரு சாரர் முஹர்ரம் முதல் பத்து நாட்களோ அல்லது (ஆஷுரா) பத்தாம் நாளோ ஹுஸைன்(ரலி) அவர்களின் மரணத்தை நினைவுப்படுத்தி ஒப்பாரி வைப்பது, மாரடித்துக் கொள்வது, பஞ்சா எடுப்பது, தீ மிதிப்பது, ஊர்வலங்கள் நடத்துவது, மௌலூது ஓதுவது போன்ற அநாச்சாரங்களைச் செய்து வருகின்றனர். இது நபி(ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ செய்யாத அநாச்சாரங்களாகும். இஸ்லாம் அங்கீகரிக்காத செயலாகும்.

கன்னத்தில் அறைந்து கொண்டு, சட்டைகளக் கிழித்துக் கொண்டு, அறியாமைக் காலத்து (ஒப்பாரி)க் கூப்பாடு போடுபவன் என்னைச் சார்ந்தவனல்லன். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்(ரலி), நூல்: புகாரி,முஸ்லிம்,திர்மிதி,இப்னுமாஜா,அஹ்மத்).

(நமது)சோகத்தைக் கண்களாலும், உள்ளத்தாலும் வெளிப்படுத்துவது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுவதாகும். அல்லாஹ்வின் அருளுக்குரியதாகும். கையாலும், நாவினாலும் வெளிப்படுத்துவது ஷைத்தானிடமிருந்து ஏற்படுவதாகும். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: முஸ்னத்- அஹ்மத்).

(துன்பம்,துக்கம் ஏற்படும் போது) தலையை மழித்துக் கொள்பவனையும், ஒப்பாரி வைப்பவனையும், ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனையும் விட்டும் நான் விலகிக் கொண்டேன். (அறிவிப்பாளர்: அபூமூஸா அல் அஷ்அரி(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்).

எனவே கர்பலா நிகழ்ச்சியை ஆதாரமாகக்கொண்டு ஹுஸைன்(ரலி) அவர்களின் மரணத்திற்காக ஒப்பாரி, மாரடித்தல், தீ மிதித்தல், பஞ்சா எடுத்தல், ஊர்வலம் நடத்துதல், மௌலூது ஓதுதல் போன்ற செயல்கள் இஸ்லாத்தில் இல்லாத செயல்களாகும்.

வல்ல அல்லாஹ்வின் மிகப்பெரும் பேரருளால் ஸஹாபா பெருமக்கள் (ரலி) சத்திய இஸ்லாத்தின் நெறியை கட்டிக்காப்பதற்கு தியாகங்கள் பல செய்து ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு 1431 வருடங்கள் சென்றுவிட்டது. 1432-ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நாம் நமது மார்க்கத்தை நாமும் தூய்மையான வழியில் பின்பற்றி பிற மக்களுக்கும் எடுத்துச் சொல்வதற்கு (அழைப்பு பணியில் ஈடுபட) திறமையை வளர்த்துக்கொள்ளவும், நமது பாதையில் மார்க்கத்திற்கு முரணான காரியங்களை எதிர்கொள்ளவும் தியாக மனப்பான்மையை வளர்த்துக்கொள்வோம். இன்ஷாஅல்லாஹ்.

- அலாவுதீன்

(FACE BOOK) முகப் புத்தகம் !

(FACE BOOK)
முகப் புத்தகம்!
இதில் அறிமுகமானவர்களும்,
அறிமுகமில்லாத புதியவர்களும்.
அறிமுகப்படுத்திகொள்ளலாம்.
தகவல் பறிமாறவும்,
கருத்து பறிமாறவும் ஆரம்பித்து,
பித்து பிடிக்கும் அளவிற்கு காதல்,
காமம் பறிமாறிக்கொள்ளவும்,
அந்தரங்கம்,அரங்கத்தில் அரங்கேறவும் செய்யும்.
நட்பு குரங்காக வந்து தலையில் ஏறி
பேன் பார்துக்கொண்டே ,
நம் மூளையை உரிஞ்சு விடக்கூடிய அபாயமும் உண்டு.
நமக்குத்தெரியாமலே நாம் களவாடப்படுவதும்,
திருட்டு போவதும் என்னேரமும் நடக்கலாம்.
இந்த முக புத்தகத்திற்கு பல முகம் உண்டு.
நாம் உளவு பார்கப்படுவது நம் கண்னெதிரே தெரியும்
நம்மாள் ஒன்றும் சொல்லவியலாது.
நமக்குத்தெரியாமலும் உளவு பார்க்கும்
ஓற்றர்கள் இந்த இனையங்கள் .
இதில் அதிக கவணம் பார்த்து இருங்கள்.
கவனத்துடனே இணையுங்கள்.
அவ்வாறு இல்லையென்றால்,
நாளை நம் முகம் தொலைந்தவர்களாகவோ,
பிறர் முகத்தில் விழிக்க முடியாதவர்களாகவோ
ஆகிவிடுவோம்.எச்சரிக்கை

-- CROWN

Dec 6, 2010

டிசம்பர் ஆறும்! இஸ்லாமியர்களின் கண்களில் குளமும்!!.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 வந்தால் முஸ்லிம்கள் இடிக்கப்பட்ட பாபரி பள்ளியின் நினைவாக போராட்டம் நடத்துவதும், கோரிக்கைகளை முன் வைப்பதும் வாடிக்கையான ஒன்றாகிப்போனது!. அன்றைய தினம் பாராளுமன்றம் நடந்தால் வேஷம் போட்ட இந்த அரசியல் வாதிகள் பாராளுமன்றத்தில் கோஷம் போட்டு தங்களின் அரிப்பை தீர்த்துக் கொள்ளுவார்கள். ஆனால் இந்தப் பாவப்பட்ட முஸ்லிம்கள் மட்டும் இன்று நமக்கு நல்ல தீர்ப்பு வரும், நாளை நமக்கு தீர்ப்பு வரும் என்று நீதிமன்றங்களை நம்பி, நீதியின் மேல் தங்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தி வந்தனர். ஆனால் இந்த அலகாபாத் நீதிமன்ற தீதுபதிகள், அயோக்கியர்கள் சங்க்பரிவார்களை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, அந்த பொறுப்பினை இவர்கள் தங்களிடம் எடுத்துக்கொண்டு விட்டனர். சங்க் பரிவார்கள் முஸ்லிம்களுக்கு கடப்பாரை மூலம்தான் கரசேவை நடத்திக்காட்டினார்கள் என்றால் இந்த கட்டப்பஞ்சாயத்து நாட்டாமைகள், தங்களின் பேனா மூலமாகவே முஸ்லிம்களின் இதயத்தில் வேறொரு கரசேவையை நடத்தி, அட அறிவு கெட்ட முஸ்லிம்களே! இன்னுமா நீங்கள் எங்களை நம்பி இருக்கின்றீர்கள் (?) என்று நமக்கு ஒரு பாடத்தினை கற்று தந்துள்ளனர். இந்த தீர்ப்பினை கேட்டதும் முஸ்லிம்களின் இதயத்தில் ஈட்டி பாய்ந்து “கண்கள் குளமானதம்மா பாபர் பள்ளியை நினைக்கையிலே” என்ற வரிகள் தான் நம் நினைவுக்கு வந்தது!.

இதனிடையே உச்ச நீதிமன்றம் முஸ்லிம்களின் கண்களில் வடியும் அந்த நீரை துடைப்பதைப் போல், அலகாபாத் நீதிபதிகள் மீது சரமாரி புகார்களை தெரிவித்து கண்டனம் தெரிவித்ததையும் நாம் நன்றியோடும் நம்பிக்கையோடும் பார்க்கின்றோம்!. என் இஸ்லாமிய சகோதரர்களே! இயக்கங்களே!!. இனியும் இந்த அரசியல் அயோக்கியர்களை நம்பி பாபரி பள்ளி விசயத்தில் அவர்களின் பின்னால் நாம் செல்வது முறைதானா? என்றொரு கேள்வியை நமக்கு நாமே கேட்கும் நாள் வந்துவிட்டதாகவே நமக்கு படுகின்றது!. அதுமட்டுமில்லாமல் வருகின்ற தேர்தல்களில் ஓட்டு என்ற அந்த ஆயுதம் மூலம் நாமும் ஒரு கரசேவையை நடத்திக்காட்டி இந்த காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து விரட்டி அடிக்க நேரம் வந்துவிட்டது!. உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு கடைசியாய் நாம் காத்திருப்போம். அங்கும் நமக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் “யா அல்லாஹ் இது உன்னுடைய இல்லம். எங்களை காட்டிலும் உனக்கே அதில் முக்கியத்துவம் உண்டு!. எங்களால் முடிந்தவரை நாவால் போராடினோம்!. ஆனால் கரத்தால் போராட சக்தியற்றவர்களாக இருக்கின்றோம்!. அதனால் நீ எங்களை குற்றம்பிடித்து விடாதே!. எங்களின் சகோதர இயக்கங்களும் ஆளுக்கொரு திசையில் எங்களை வழிநடத்தி எங்களுக்குள்ளே மேலும் மேலும் ஒற்றுமையை குழைத்துக் கொண்டிருக்கின்றனர்!. எனவே முதலில் அவர்களுக்குள் ஒற்றுமையைக் கொடு!. நீ அபாபில் பறவையை வைத்து சுட்ட சிறு கல்லினால் யானைப்படைக்கே கரசேவை நடத்தியவன், விளையாட்டு காட்டியவன்!!. அதேபோல் இந்த பாபர் பள்ளிக்கும் நீ அருள்புரிவாயாக என்று மனமுறுகி துவா செய்தவனாக!

அதிரை முஜீப்.

மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி

மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது.

கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.

இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது.” என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அடுத்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது. அவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.

இதன் மூலம் இரத்தநாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும்.

கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்த இஞ்சியின் பலன்கள் இதோடு நின்றுவிடவில்லை. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது.

- சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.

- இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி

- இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

- மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.

- செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

- மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

- தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.

- மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருப்பதால் ஆஸ்பிரின் ஒவ்வாதவர்களுக்கு இது நல்லதொரு அருட்கொடையாகும்.

எனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இம்மருத்துவ குறிப்பு ஏற்கனவே மின்னஞ்சல் மூலமாக நமக்கு கிடைத்திருந்தாலும், நல்ல பயனுல்ல தகவல் என்பதால் இங்கு அனைவரின் பார்வைக்கு தருகிறோம். இச்செய்தியை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துக்கொண்ட அஸ்கர் (மாதவலாயம்) அவர்களுக்கு மிக்க நன்றி.

தகவல்: அதிரை அஹ்மது

அடக் காதிதமே!

உன்னால் மனிதன் படும் அவதி
உன்னை உருவாக்கியவனேயே
உருட்டி விளையாடும் உன்தந்திரம்
காகிதமான உனக்கு மனிதனின்
கதறல் கேட்குமா?

காதல் மனைவியை பிரிந்து
அருமைக் குழந்தைகளை பிரிந்து
பெற்றோர் நண்பர்களை பிரிந்து
காகிதமே உனை சேகரிக்க
கடல்கடந்து கானகம் செல்லும் கஷ்டம்

ஓ இப்படி
பாசங்களை பிரிப்பதால்தான் உனக்கு
பணம் என்று பெயர் வந்ததோ!

இறைவன் உன்னை படைத்திருந்தால்
கொஞ்சமேனும்
இரக்கத்தை வைத்திருப்பான்
மனிதனல்லவா உன்னை படைத்தான்
அதனால்தான்
மனது வைக்க தவறிவிட்டான்

அடுக்கு மாடிகளிலேயே
அழகாய் அடங்கி இருப்பதும்
அவதிபடும் ஏழைக்கு
அரைவயிற்றுக்கு கஞ்சிக்கும்
அவதியில் அலையவிட்டு
ஆட்டம் போடுகிறாயே!

அவன் வாங்கிவந்த வரம் ஆடம்பரம்
இவன் வாங்கி வந்த வரம் வறுமை வரமா?

பணமே!
உன் ஒற்றை ரூபாயால்
ஒருவன் மனம் நிறைவடைந்து
பசியாறினானேயானால்
நீ படைக்கப்பட்டதற்கான பலன்
புண்ணியமே!

புலங்கபடா இடத்திலே
பதுங்கியிருக்க நினைத்து
பல கோடிகளிடமே
நீ புரழ்வாய் என்றால்
உன் பிறப்புக்கான பலன்
ஆணவமே!

-- அன்புடன் மலிக்கா

Dec 5, 2010

இன்று 06-12-2010

தேசந்தந்தை காந்தி பிறந்த நாளை விட மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இந்தியா நினைத்து பார்க்கிறது. இரண்டு மதத்தவரும் இப்போது போடும் வழக்கை தொடர்ந்துகொண்டே இன்று வரை இழுத்தடித்து இருந்தால் இந்திய மண்ணில் இத்தனை உயிர்கள் அனாவிசயமாக போயிருக்காது. எப்போது நாகரீகம் எனும் ஒரு சர்க்யூட்டில் பிறச்சினையோ அப்போதெல்லாம் கொத்து கொத்தாக மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது...இதை இன்று வரை உலகவரலாறு எடுத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.

ஒரு Flash Back

சென்னையின் கக்கூஸ் நாத்தமில்லாத இரவு நேரம் சென்னைக்கு செல்லும் கம்பன் எக்ஸ்பிரசில் திருவாரூர் ஸ்டேசனில் ரயில் நிக்க நான் ஆழ்ந்த நித்திரையில் என் எக்கோலாக் சூட்கேசில் [நியு-காலேஜ் மாணவர்களின் ஸ்டேடஷ் சிம்பள்] தலைவைத்து பெர்த்தில் தூங்கி கொண்டிருக்க... 'லத்தியால் நான் தலைவைத்து தூங்கிகொண்டிருந் பெட்டியில் அடித்து எழுப்பிவிட்டு "வெடிகுண்டு இருக்கானு இந்த ட்ரயினை செக் பண்ரோம்" என அந்த போலீஸ் சொல்ல நானும் இன்ஸ்டேன்ட்டா..' ஆமாய்யா வெடிகுண்டு உள்ள பொட்டியை தலைக்கு வச்சிதான் தூங்குவானுக'... இந்த போலீஸ்தான்ஸ்காட்லாண்ட் யார்ட்????......

ஞாயமான கேள்வி

எதற்க்கெடுத்தாலும் "துவாச்செய்யுங்க அத்தா..துவாச்செய்ங்க..." என சொல்பவர்கள் , எதிரில் நின்று கேட்கும் மனிதர் துவா எதற்க்கு செய்ய வேண்டும் என தெரியாமலேயே போய் விடுகிறார். துவா செய்ய சொன்னவரும் 'அன்றைக்கு சொன்னேனே துவா செஞ்சீங்களா?' என கேட்காமல் ரெக்கார்டெட் மெஸ்ஸேஜ் மாதிரி மற்றவரிடமும் அதை ஒப்பிக்க சென்று விடுகிறார்.

நீதி: "துவா செய்ய காரணம் 10 வரிக்கு மிகாமல் விளக்கவும்"

ஒரு சின்ன கதை:

ஒரு நல்ல அரசன் ஆளும் இடத்தில் ஒரு துறவி ஊர்க்கோடியில் இருந்தார். அங்கு எல்லா மக்களும் போய் அந்த துறவியிடம் அறிவுரை பெற்று வந்திருக்கின்றனர். அந்த மன்னனுக்கு ஒரு ஆச்சர்யம் துறவி..அதுவும் பிச்சைக்காரன் கோலத்தில் இருப்பவனிடம் ஏன் மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக போகிறார்கள்?. ஆர்வத்தால் ஆட்களிடம் சொல்லி துறவியை அழைத்துவந்து 'ஏன் உங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ? " என கேட்க ..”நாளை சொல்கிறேன்” என துறவி சொல்லி இருக்கிறார். அந்த இரவு அரண்மனையில் தங்க அனுமதியை அரசன் தர...

' நீங்கள் எந்த விதமான அறையில் தங்க ஆசை?..---. அரசன்.

'உன் அறையை விட விசாலமான வசதியான அறையில்...' ---- துறவி

'என்னமாதிரியான சாப்பாடு'---அரசன்

'உன் சாப்பாட்டை விட ஆடம்பரமான சாப்பாடு'துறவி

அரசனுக்கு ஒரே குழப்பம் "எப்படி உங்களைப்போய் துறவி என சொல்கிறார்கள் மக்கள்? இப்படி பேராசை பிடித்து அலைகிறீர்கள்...அரசன்.

நாளை தெரிந்துகொள்வாய் அரசே...--- துறவி

மறுநாள் காலையில் துறவி புறப்பட்டு தனது இடத்துக்குபோக வேண்டும், போகும்போதும் அரசனுடைய குதிரையை விட நல்ல குதிரை , அரசனின் உடையை விட நல்ல உடை இப்படி துறவி கேட்க , எல்லாம் தரப்பட்டது. அரசனும் வழியனுப்ப அவருடன் செல்ல ஊர்க்கோடியில் அந்த துறவி தனக்கு கிடைத்த குதிரை, நல்ல உடை அனைத்தையும் திருப்பி அரசனிடமே கொடுத்துவிட்டு
தனது கிழிந்த உடையுடனும் வெறுங்காளுடனும் நடக்க.....

அரசன் 'இன்று தெரியும் என்று சொன்னீர்களே...'

'என்னால் நேற்று கிடைத்த அத்தனை சுகத்தையும் , வசதியையும் ஒறே நொடியில் தூக்கி எறிந்து விட்டு வாழ முடியும் அரசே உனக்கு அந்த மனப்பக்குவம் இருக்கிறதா?...துறவியின் கேள்வியில் அரசன் அசந்து விட்டான்.

வாழ்க்கையில் நமக்கு சார்ந்திருப்பது தவிர்க்க முடியாதது ஆனால் சொந்தம்
கொண்டாட எதுவும் இல்லை. இந்த தாமரை இலை நமக்கு கற்றுத் தரும் பாடம் என்ன தெரியுமா?...தண்ணீரில் இருந்தாளும் தண்ணீர் ஒட்டாத அந்த சூழல்...நம்மை சுற்றி எல்லாம் இருந்தாலும் எதுவும் நமக்கு சார்ந்ததல்ல. பல பிரச்சினைகளுக்கு காரணம் ' அது என்னுடையது” என்ற வாதம்தான்.

உடுத்தி கிழித்ததும் , உண்டு செரித்ததையும் தவிர எதுவும் நமக்கு சொந்தமில்லை.

- ZAKIR HUSSAIN

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More