Jun 22, 2010

வாழ்க்கைல ஒரு சவால் இருக்கனும்

ஜப்பானில் உள்ள மக்கள் ஆரம்பதில் இருந்தே மீனை பிடித்தவுடன் ( FRESH FISH ) ருசித்து சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் ( நம்ம ஆள்கள் போலதான் ), ஆனால் மக்கள் தொகை பெருக்கதால் அவர்கள் கரை ஒரத்தில் பிடித்துவரும் மீன் அங்குள்ள மக்களுக்கு போதுமானதாக இல்லை. ஆதலால் அங்குள்ள மீனவர்கள் கடலில் வெகு தொலைவிற்கு ஆழ்கடல் சென்று அதிக மீனை பிடித்து வருவதற்க்கு பெரிய பெரிய படகுகளில் போய் மீன் பிடித்து வந்தார்கள்,ஆனால் கரை வருவதற்க்குள் அதன் புத்துணர்ச்சி (Freshness) தன்மை மாறிவிடுகிறது. அதை மீன் வாங்குபவர்கள் விரும்புவது இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்த மீனவர்கள்..குளிரூட்டும் கருவியை அவர்கள் படகுகளில் பொருத்தி..அதில் பிடித்த மீனை போட்டு கொண்டுவந்தார்கள்..அப்பொழுதும் வாடிக்கையாளர்கள் அது ஜஸ்லே வைத்த மீன்..அதனால ருசி இல்லை என்று வாங்க மறுத்தார்கள்…என்னாடா செய்வதுயேன்று யோசித்த மீனவர்கள்..அவர்களின் படகுகளில் பெரிய தண்ணீர் தொட்டிகளை இணைத்து அதில் தண்ணீர் நிரப்பி..பிடித்த மீன்களை அதில் விட்டு உயிருடன் கொண்டுவந்தார்கள் ஆனால் அது வரும் வழியில் தொட்டியில் நீச்சல் அடித்து,தொட்டியின் சுவர்களில் முட்டி கரை சேருவதற்கு முன்பே களைத்து அதன் புத்துணர்ச்சியை இழந்தன.

ஆனால் இப்போழுது ஜப்பானியர்கள் உயிருடன் பிடித்த மீனை சாப்பிடுகிறார்கள் எப்படி? மீனவர்கள் அதை செய்தார்கள்? அவர்கள் அதை தொட்டியைத்தான் உபோயிகித்தார்கள் ஆனால் அதில் ஒரு சிறிய சுறா மீனை வீட்டார்கள் , தொட்டில் உள்ள மீன்களுக்கு சுறாவிடம் சிக்கினால் ஆபத்துதான். ஆகையால் அதனிடம் இருந்த தப்பிக்க வேண்டும் என்று சவால் எடுத்து, தொடர்ந்து தொட்டியில் இடைவிடாமல் நீந்தி கொண்டு, சுறா என்ற சவாலை எதிர் கொண்டு உயிருடனும் புத்துணர்ச்சியுடனும் இருந்தன.

அதேபோல் நம்மிலும் பலர் இதைபோல் தொட்டியில் சுறா இல்லாமல் வாழூம் மீன்களைபோல் வாழ்க்கையில் எந்தவித இலக்கும், சவாலும் இன்றி கிடைத்ததுபோதும் என்று வாழ்ந்து மற்றும் வாய்ப்பு கிடைத்தும் நழுவ விட்டு நொந்து நூலாகி மதிப்பு இல்லாமல் போய்விடுகிறோம். ஆனால் வாழ்க்கையில் சவாலைகளை எதிர் கொண்டு. அதில் தொடந்து வெற்றி கண்டு அதானால் மகிழ்ச்சி அடைந்து. புத்துணர்ச்சி பெற்று ஏறு நடை போட்டு வாழ்கின்றவர்கள்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

சோம்பேறிதனம் வாழ்க்கையே அழித்துவிடும் அல்லாஹ் நமக்கு எல்லாவித திறமைகளையும் அளித்து இருக்கிறான். வெற்றி தோல்வி என்பது சோம்பேறிதனத்தை அகற்றி கையால்வதில் தான் இருக்கிறது. உங்களுடைய வாழ்க்கை என்ற கடலில் சவால் என்ற சுறாவை விட்டு அதை எதிர் கொண்டு பாருங்கள். அதில் வெற்றியடையும் போது உள்ள மகிழ்ச்சி உங்களை சுறுசுறுப்பாக்கும், சந்தோசமாக வாழ வைக்கும் (அல்லாஹ்வின் உதவியால்)

நீங்கள் இந்த கட்டுரையே படித்து. சோம்பல் படாமல் பின்னூட்டம் இடுவீர்கள் என்று நம்புகிறேன்.

சிந்தனை & ஆக்கம்

யாசிர் -துபாய்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More