Jun 27, 2010

உமர்தம்பிக்கு விருது - புகைப்படங்கள்

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பிக்கு ‘தமிழ் இணைய அறிஞர்’ என்ற விருது  நேற்று மாலை 6:00 மணியளவில் வழங்கப்பட்டது.
                                                                                                                                                                  
சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக இவ்விருது வழங்கப்பட்டது, தமிழ் இணைய உலகில் பிரபல்யமான தமிழ் இணைய ஆர்வளர் திரு.பாலா பிள்ளை அவர்கள் விருதை வழங்கினார்கள், உமர்தம்பி அவர்களின் மூத்த சகோதரர். அப்துல் காதர் அவர்களும், உமர்தம்பி அவர்களின் மூத்த மகன் மொய்னுதீனும் விருதை பெற்றுக் கொண்டனர்.

உமர்தம்பி தம்பி அவர்களின் மகனும், சகோதரரும் துணை முதல்வர் மான்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்கள், உமர்தம்பி அவர்களின் தமிழ் சேவையை துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாராட்டினார்கள், உமர்தம்பிக்கு அங்கீகாரம் தர தம்மிடம் நிறைய கோரிக்கைகள் வந்தாகவும் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறினார்கள்.

விருது வழங்கப்பட்ட புகைப்படங்கள் இதோ...



மறைந்த அதிரை உமர்தம்பி அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்த சிங்கப்பூர் தமிழ் சங்கத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

புகைப்படம் உதவி செய்த சகோதரர் கோவை சஞ்சய் காந்திக்கு நன்றி.

7 comments:

தன்னலம் கருதாத திரு.உமர்தம்பி அவர்களை கவுரவ வித்தது போற்றதக்கது ..மனதிற்கு மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ்

மகிழ்ச்சி கலந்த சந்தோஷமான செய்தி

உடன் போட்டோ வை பதிந்ததற்கு நன்றி

சகோதரர். சாஹூல் ஹமீது, போட்டோ நேற்று இரவு 9.30 மணியளாவில் கோவையை சேர்ந்த சகோதரர் சஞ்சய் காந்தி அவர்கள் எனக்கு ஈமெயில் மூலம் அனுப்பிவிட்டார். அவரின் மடலிருந்து சில

//திரு.தாஜூதீன் அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் பதிவு படித்தேன்.. இன்று தமிழ் இணைய மாநாட்டில் திரு உமர்தம்பி அவர்களுக்கு விருது அளித்து கவுரவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தார் கலந்து கொண்டனர்.. நிகழ்வின் ஒரு பங்கேற்பாளராக இருந்தது பெருமையாக இருந்தது.. விருது நிகழ்வின் படங்கள் அனுப்பி உள்ளேன்.. பயன்படுத்திக் கொள்ளவும்.. நன்றி..

--
With Love
SanjaiGandhi
http://blog.sanjaigandhi.com//

இப்புகைப்படங்களை முதன் முதலில் இணையத்தில் நம்முடைய தளத்தில் வெளியிட உதவிய திரு. சஞ்சய் காந்தி அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

ஆட்டை கழுதை (கழுவி ) ஆக்கிய ஊர் என்ற அவபேரை மாற்றி இன்று உலகதிற்கு இணைய தமிழை கொடையளித்த மர்ஹும் உமர் தம்பி அவர்களுக்கு அதிரை வாசிகள் என்றென்றும் நன்றி செலுத்த கடமைபட்டுள்ளோம்

பெருமைப் படுத்தியவர்களுக்கு மிக்க நன்றி

ஐயா. தருமி, தங்களின் வருகைக்கு நன்றி, "தமிழ் கணினி அறிஞர்" உமர்தம்பி அவர்கள் பற்றி இன்னும் சில சுவையான செய்திகள் விரைவில் இவ்வலைப்பூவில் வெளியிடப்படும்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More