Jun 22, 2010

கண்ணுக்குள் கண்ணாடி - உமர் தம்பி - 4

நேற்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது கிடைத்த ஒரு தகவல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடல்லாமல் ஆனந்ததையும் அளித்தது.

தடித்த கண்ணாடிகளை தவிர்க்க உதவும் ஒரு லேசர் சிகிச்சைபற்றிய தகவல் அது. லேசிக்(LASIK - Laser Assisted In-Situ Keratomileusis) எனப்படும் ஒருமுறை மூலம் லேசரை பாவித்து பார்வைக் கோளாரை சரி செய்யும் ஒரு வழி. இதை முதலில் அறிமுகம் செய்தவர் சிறீனிவாசன் என்கிற மைலாப்பூரைச் சேர்ந்த சென்னை வாசிதான் என்கிற தகவல்தான்என்னை அப்படி ஆச்சரியப் படுத்தியது. இந்த தகவலைத் தந்தவர் ஏதோ வழியே போகும் ஓர் ஆசாமி அல்ல. நேத்திராலயாவின் தலைவர்- பத்மபூ‡ன் விருதுபெற்ற கண் மருத்துவர்.

சில ஆண்டுகளுக்கு முன் அமீரகத்தில் படித்துக் கொண்டிருந்த என் மூத்த மகனுக்கு இந்த சிகிச்சை செய்ய நேர்ந்தது. -2.5 அளவுக்குகண்ணாடி அணிய வேண்டிருந்த அவன் அதை அணிவதை தவிர்த்து வந்ததால் பெரும் சிக்களுக்குள்ளானான். படிப்பில் தாழ்வு ஏற்படத்தொடங்கியது. நண்பர்கள் மத்தியில் கேளிக்குள்ளானதாலோஎன்வோ அது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் அவனே "கண்ணாடியில்லாமலே பார்வை சரி செய்கிறார்களாம்; நான்அதைச் செய்து கொள்ள வேண்டும்" என்றான். ஏதோ ஒரு வலைப் பக்கத்தில் இந்த செய்தியைக் கண்ட அவன் அதில் பிடிவாதமாகஇருந்தான். விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்தபோது விசாரித்து அங்குள்ள பிரபல கண் மருத்துவ மனையில்(அகர்வால் கண் மருத்துவமனை) இந்த சிகிச்சை அளிப்பதறிந்து அங்கு செய்து கொண்டான். அப்போது ஒரு புதிய விடயமாகப் பேசப் பட்டது. அன்றிலிருந்து அவவன் கண்ணாடி அணியத் தேவையிருக்கவில்லை.

பொதுவாக இளம் வயதில் கிட்டப்பார்வை (அதாவது தூரத்தில் இருப்பது மங்கலாக தெரிவது - myopia) கோளாறுகள் ஏற்படுவது சகஜம். இதற்கு குழி கண்ணடிகளை அணிவது அவசியம். சில சமயங்களில் அதிக எண்ணுள்ள தடித்த கண்ணாடிகளை அணிய வேண்டியிருக்கும். கண்ணினுள் போட்டுக்கொள்ளும் லென்சு (contact lense) களை பாவிக்கலாம் என்றாலும் அதிலும் நிரம்ப சிக்கல் இருக்கிறது. இதற்கு இந்த லேசிக் சிகிச்சை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். மற்ற கண் அறுவை சிகிச்சை போலல்லாமல் சிகிச்சைக்குப்பின் சாதரணமாக இருக்கலாம்.

இந்த முறை இளம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பல பெண்களின் திருமணம் அமையாதிருப்பதற்கு தடித்த கண்ணாடிகளும் ஒரு காரணம்.

சரி இந்த முறையில் என்னதான் நடக்கிறது? நாம் லேசர் பற்றி அறிந்ததெல்லாம் சில விழாக்களில் நடக்கும் லேசர் ஓளி வேடிக்கைகள்தான். ஆனால் லேசர் என்ற ஒளிக்கற்றை எத்தையோ வகைகளில் கையாளப் படுகிறது. கணினியில் குறுந்தட்டை படிப்பதிலிருந்து ஏவுகணைகளை வழிகாட்டுவது வரை பல்வேறான வகைகளில் பயன்படுகிறது. அறுவை சிகிச்சையில் குறிப்பாக கண் மருத்துவத்தில் இதன் பங்கு அதிகம்.

கிட்டப் பார்வையை களைய வேண்டுமானால் குழி லென்சு அணியவேண்டும் என்பது நாம் அறிந்ததே(பள்ளி நாட்களில் படித்தவை நினைவில் வரவேண்டுமே!). அதாவது, கண்ணினுள் இருக்கும் குவி லென்சின் அளவு எண்ணை(power index) குறைக்க வேண்டும். வேறு விதமாகச் சொன்னால் அதன் தடிமனைக் குறைக்க வேண்டும். இறைவனால் கொடுக்கப்பட்ட அந்த லென்ஸ் அலாதியானது. சாதாரன கண்ணாடியல்லாமல் தேவைக்கேற்ப குவியத்தை மாற்றிக் கொள்ளக்கூடியது. அதில் கை வைப்பது அவ்வளவு உசிதமில்லை. அதற்கு பதிலாக முன்னால் இருக்கும் கார்னியா-cornia(கருவிழி பகுதி)வில் அந்த மாற்றம் செய்யபடுகிறது.

கார்னியா என்பது ஒரு கண்ணாடி போல் ஒளியைச் செலுத்தும் ஒரு திசு. தேவையான மாற்றத்தை அதில் செய்து விட்டால் பார்வையை சரி செய்து விடலாம். அதாவது கண்ணாடியாக அணியும் குழி லென்ஸ் என்ன விளைவைத் தருமோ அந்த அளவுக்கு அதை செதுக்கி எடுத்துவிட்டால் கண்ணாடி அணிந்த அதே நிலையைக் கொண்டு வந்துவிடலாம். இந்த செதுக்கும் வேலையைத்தான் லேசர் செய்கிறது. சரி, எவ்வளவு செதுக்கவேண்டும்? இதை முன்னமே கணிக்க வேண்டும். Auto-refractor என்ற கருவியின் துணைகொண்டு துள்ளியமாக கணிப்பார்கள்.

இந்த சிகிச்சைக்கு பயன்படுத்தப் படுவது Excimer எனப்படும் ஒருவகை லேசர். இது குளிர் லேசர் வகையைச் சார்ந்தது. ஒரு நேனோ மீட்டர்(பில்லியனில் ஒரு பகுதி) அளவு விட்டத்தைவிட குறைவான அளவுதான் கண்ணினுள் செலுத்தப்படுகிறது. இது கார்னியாவின் முலக்கூறுகளை உடைத்து செதுக்குகிறது. சிகிச்சையின்போது லேசர் கற்றைகளை தொடர்ந்து செலுத்துவதில்லை. விட்டுவிட்டு செலுத்தப்படும். ஒவ்வொரு முறை செலுத்தப்படும்போதும் சிறிது சிறிதாக கார்னியா செதுக்கபடும். ஒரு மில்லி மீட்டரில் 1000 இல் ஒரு பங்கு அளவுக்குகூட துள்ளியமாக செதுக்கலாம். இந்த லேசர் செலுத்தப்படும் நேரம் (சுமார் 20 நொடிகள் - இது தேவைக்கேற்ப மாறும்) சிறிதே என்றாலும் அதற்குமுன் செய்யப்படும் சோதனைகளுக்கு சற்று நேரம் பிடிக்கும்.

இந்த சிகிச்சை முறை நிரந்தரமானதா? ஆம்; 90 சதவிகிதம் நிரந்தரமானதுதான்.
ஒரு சிலருக்கு மீண்டும் திருத்தம் தேவைப்படலாம். செலவு சற்று அதிகம்தான். வந்த புதிதில் இருந்ததைவிட இப்போது குறைந்திருக்கிறது.

என் பையன் அவனுடைய பழைய புகைப் படத்தைப் பார்த்து அவ்வப்போது சிரிதுக்கொள்வான். "இந்த தடிச்ச காண்ணாடியெ போட்டுக்கிட்டுதானே அலைஞ் சுக்கிட்டிருந்தேன்?"

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More