குளிர்ந்த காற்று குளத்தை முத்தமிட்டுச்செல்லும்
மரங்கள் அதை தட்டிக்கொடுத்து மகிழும்
உண்டியலில் விழும் சில்லரை காசுபோல்
மீன்கொத்தி குளத்தில் விழுந்து தன் அலகால் மீனைக்கவ்வும்
மீன் பிடித்து ஓய்ந்து போன பறவைகள் மரத்தில் ஓய்வெடுக்கும்
பெரியவர், சிறியவர் பாகுபாடின்றி திண்ணை வரவேற்கும்
சாய்ங்காலக்காற்று திண்ணையில் சாய்வோருக்கு சாமரம் வீசும்
வெண் சோப்பு நுரை கரையேற அலையில் துடிக்கும்
ஊருக்கு வரும் வரியவர்க்கு கோடைவாசஸ்தலமாய் மாறும்
எவ்வித மருந்தின்றி அங்கு உறக்கம் தானாய் தேனாய் வரும்.
இரவில் வெண் நிலா இறங்கி வந்து குளத்தில் நீந்தும்
காண்போரின் உள்ளமோ கண்கொள்ளாக்காட்சியில் மிளிரும்
சிறு பாம்புகள் நெளிந்து சென்று நீச்சல் பழகும்
ஆமைகள் அவ்வப்பொழுது நீர் மேல் வந்து
வருகைப்பதிவேடு ஏதுமின்றி வணக்கம் ஐயா சொல்லிச்செல்லும்
குளிப்பவரை சிறு மீன்கள் கிள்ளிச்செல்லும்
தவளைகள் தன்...