Welcome to our website. Neque porro quisquam est qui dolorem ipsum dolor.

Lorem ipsum eu usu assum liberavisse, ut munere praesent complectitur mea. Sit an option maiorum principes. Ne per probo magna idque, est veniam exerci appareat no. Sit at amet propriae intellegebat, natum iusto forensibus duo ut. Pro hinc aperiri fabulas ut, probo tractatos euripidis an vis, ignota oblique.

Ad ius munere soluta deterruisset, quot veri id vim, te vel bonorum ornatus persequeris. Maecenas ornare tortor. Donec sed tellus eget sapien fringilla nonummy. Mauris a ante. Suspendisse quam sem, consequat at, commodo vitae, feugiat in, nunc. Morbi imperdiet augue quis tellus.




Showing posts with label அதிரை செய்திகள். Show all posts
Showing posts with label அதிரை செய்திகள். Show all posts

Apr 25, 2011

செக்கடிக்குள கரையினிலே.........

குளிர்ந்த காற்று குளத்தை முத்தமிட்டுச்செல்லும்

மரங்கள் அதை தட்டிக்கொடுத்து மகிழும்

உண்டியலில் விழும் சில்லரை காசுபோல்

மீன்கொத்தி குள‌த்தில் விழுந்து தன் அலகால் மீனைக்கவ்வும்

மீன் பிடித்து ஓய்ந்து போன‌ ப‌ற‌வைக‌ள் ம‌ர‌த்தில் ஓய்வெடுக்கும்

பெரியவர், சிறியவர் பாகுபாடின்றி திண்ணை வரவேற்கும்

சாய்ங்கால‌க்காற்று திண்ணையில் சாய்வோருக்கு சாம‌ர‌ம் வீசும்

வெண் சோப்பு நுரை கரையேற அலையில் துடிக்கும்

ஊருக்கு வரும் வரியவர்க்கு கோடைவாச‌ஸ்தலமாய் மாறும்

எவ்வித மருந்தின்றி அங்கு உற‌க்க‌ம் தானாய் தேனாய் வரும்.

இரவில் வெண் நிலா இற‌ங்கி வ‌ந்து குள‌த்தில் நீந்தும்

காண்போரின் உள்ள‌மோ க‌ண்கொள்ளாக்காட்சியில் மிளிரும்

சிறு பாம்புகள் நெளிந்து சென்று நீச்ச‌ல் ப‌ழ‌கும்

ஆமைக‌ள் அவ்வ‌ப்பொழுது நீர் மேல் வந்து

வருகைப்பதிவேடு ஏதுமின்றி வ‌ண‌க்க‌ம் ஐயா சொல்லிச்செல்லும்

குளிப்ப‌வ‌ரை சிறு மீன்க‌ள் கிள்ளிச்செல்லும்

த‌வ‌ளைக‌ள் த‌ன் வாயால் யாருக்கோ கூப்பாடு போடும்

தாம‌ரை இலை த‌ன்மேல் ப‌டுத்துற‌ங்கும் த‌ண்ணீரை தாலாட்டும்

ம‌ழை நீரால் குள‌ம் நிர‌ம்பும் ம‌கிழ்ச்சியில் ம‌ன‌ம் நிர‌ம்பும்

துவைக்க‌ப்ப‌டும் துணியால் குள‌க்க‌ரை ந‌ன்கு அடிவாங்கும்

அத‌ன் ச‌ப்த‌ம் குள‌ம் சுற்றும் கேட்கும்

வானில் ப‌ட‌ர்ந்து சூரிய‌னுக்கு விடுமுறைய‌ளிக்கும்

சிறார்க‌ளின் க‌ல் சிறு அலையை சிறுவட்டமாய்‌ உண்டாக்கும்

யார் வீட்டு அன்ன‌மோ குள‌த்தில் அது எண்ண‌ம் போல் நீந்தும்

இவை மூலம் இய‌ற்கை இராப்பகலாய் கொஞ்சி விளையாடும்

எல்லாவ‌ற்றையும் இறையில்ல‌ம் (செக்கடிப்ப‌ள்ளி) மேலிருந்து நன்கு க‌ண்காணிக்கும்.

ஊரில் ந‌ல்ல‌ ம‌ழை எங்கோ ந‌ம் உள்ள‌த்தில் குளிர்

காற்றால் ம‌ர‌ம் அங்கு சாய்ந்த‌து உள்ள‌மோ இங்கு உருண்ட‌து

நீரில் அங்கு மீன் துள்ளிய‌து இங்கு நினைப்பால் உள்ள‌ம் துள்ளிய‌து

அங்கோ உண்மையில் ம‌ழைத்தூரல் இங்கோ உள்ளத்தில் ம‌ழைச்சார‌ல்


அதிரையில் உள்ள குள‌த்தாங்க‌ரைகளின் குளிர்காற்று அர‌பிக்க‌ட‌ல் ஓர‌ம் ஒதுங்கிய‌ ந‌ம‌க்கும் அவ்வ‌ப்பொழுது வீச‌த்தான் செய்கிறது நினைவில்.  அவ்வப்பொழுது நிஜ‌த்தில் விடுமுறையில்.(அது க‌லிபோர்னியாவ‌ரை செல்லுமா என்ப‌து தெரிய‌வில்லை? அங்கு மையமிட்டிருக்கும் மகுடமே (க்ரவ்ன்) பதில் சொல்லட்டும்)

(நீங்கள் அனனவரும் குளித்துக் கொண்டாடிய குளங்களை தலைப்பில் இட்டு நீங்கள் எழுதி/நினைத்து மகிழலாம் எமக்கு ராய‌ல்ட்டி ஒன்றும் தேவையில்லை இஞ்சிடீயே போதுமான‌து ச‌கோ. த‌ஸ்த‌கீர் இய‌ம்பிய‌து போல்)

இய‌ற்கையை அழ‌காய் உருவாக்கி அதை செவ்வ‌னே ஆட்சி செய்து வரும் இறைவ‌னுக்கே எல்லாப்புக‌ழும் என்று இறுதியில் போற்றிப்புக‌ழ்ந்த‌வ‌னாக‌.


-- மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Nov 19, 2010

ஷிஃபா மருத்துவமனை கலந்துரையாடல் கூட்டம்

ஏறத்தாழ, சென்ற ஒரு வாரத்திற்கு முன் அறிவிப்புச் செய்யப்பட்டு, இன்று (18/11/2010 – வியாழன்) காலை பத்தரை மணியளவில் ஷிஃபாவின் முதல் மாடியில் பொதுக்குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் நிர்வாகக் குழுத் தலைவர் M.S.T. தாஜுத்தீன் அவர்கள் தலைமையில், A.J. தாஜுத்தீன் அவர்கள் முன்னிலையில் இக்கூட்டம் தொடங்கிற்று.

தலைவர் தமது முன்னுரையில், "இந்த மருத்துவமனையின் வரலாற்றிலேயே எனக்கு இது முதலாவது கூட்டமாகும்" என்று அறிவித்து, இக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை வந்திருந்தோரின் மனங்களில் பதியச் செய்தார். நமதூரும் காயல்பட்டினமும் ஒரே பண்பாட்டைக் கொண்டிருந்தாலும், நம்மைவிட அவர்கள் மருத்துவ வசதிகளில் முன்னோடியாகத் திகழ்கின்றார்கள்; ஆனால், மருத்துவ வசதிகளைத் துவக்கியத்தில் அவர்களைவிட நாம்தான் முந்தியவர்கள் என்பதைக் குறிப்பிட்டு, நாம் செய்ய வேண்டிய பணிகளை முறையாகச் செய்யத் தவறிவிட்டோம் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

காலாகாலத்தில் அவ்வாறு நாம் மருத்துவ வசதிகளைப் பெருக்கியிருந்தால், அல்லாஹ் உதவியால், பல அகால மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்ட தலைவர், தமது கூற்றுக்குச் சான்றாக, தமக்கு நெருங்கிய சிலரின் மரணத்தைப்பற்றி நினைவுகூர்ந்து வருத்தம் தெரிவித்தார். அத்தகைய நிலைகள் இனிமேல் வரக்கூடாது என்ற கவலை அண்மைக் காலத்தில் இதன் நிர்வாகிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் ஏற்பட்டதனால்தான் இது போன்ற கலந்துரையாடல்களும் கருத்துக் கணிப்புகளும் அவசியமாகின்றன என்றார்.

ஷிஃபாவை அண்மைக் காலம்வரை நிர்வகிப்பதில் ஏற்பட்ட குறைபாடுகளால் வந்த பின்னடைவை ஒப்புக்கொண்ட தலைவர், இனிமேல் அப்படிப்பட்ட நிலை வரக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே, நிர்வாகம் ஷிஃபாவை வளர்ச்சிப் பாதையில் நடாத்திச் செல்லவேண்டும் என்பதில் முனைந்துள்ளதாக அறிவித்தார். மருத்துவமனையைத் தொடர்ந்து நடத்துவதில் தொய்வு ஏற்படாதிருக்க, கடந்த சில ஆண்டுகளாக இதன் நிர்வாகிகள் – குறிப்பாக இதன் பொதுச் செயலாளர் A.J. தாஜுத்தீன் அவர்கள் தமது சொந்தப் பணத்தில் கணிசமான தொகைகளைச் செலவு செய்துள்ளதை நன்றியுடன் குறிப்பிட்ட தலைவர், அச்செலவினங்களின் சுருக்கமான விவரத்தையும் வெளியிட்டார்.

இம்மருத்துவமனைக்கு உடனடித் தேவை என்று நிர்வாகிகள் கருதியவற்றைப் பட்டியலிட்ட தலைவர், மகப்பேறு மருத்துவர் (DGO) ஒருவர், குழந்தை மருத்துவர் (DCH) ஒருவர், சிறப்பு மருத்துவர் (MD) ஒருவர் என்று வகைப்படுத்தி, அவர்களுள் மகப்பேறு மருத்துவராகத் திருமதி கோமதி MBBS., DGO அவர்களை மிகச் சிரமப்பட்டு அழைத்து வந்து பணியாற்ற வைத்திருப்பதையும் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் சர்க்கரை நோய், இதயநோய் போன்றவற்றிற்கும் வசதிகள் செய்யப்படும் என்பதற்கு உறுதி கூறினார். நமதூரில் சுமார் எழுபது விழுக்காடு மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை ஆய்வுகள் உண்மைப் படுத்துவதையும், ஆங்காங்கு 'கேன்சர்' போன்ற கொடிய நோய்கள் தலை தூக்கி வருவதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

நமக்கு ஏறத்தாழ மூன்று ஏக்கர் நிலம் உரிமையாகவும், அதில் 1.34 ஏக்கர் அளவில் மட்டுமே மருத்துவமனை அமைந்துள்ளதையும், மீதி நிலம் அரசியல் பின்னணி உடையவர்களால் முடக்கப்பட்டுள்ளதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். அதனை மீட்டெடுக்க முனைப்புடன் வழக்குகளைச் சந்தித்து வருவதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

தலைமையுரையைத் தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களிடையே கருத்துப் பரிமாற்றம் நடந்தது. அதில் கூறப்பட்ட கருத்துகளும், அவற்றிற்கான விளக்கங்களும் வருமாறு:

• வருமானக் குறைவைப் போக்க, ஒரு கம்பெனியைத் தொடங்கலாம். அதன் மூலம் வரும் இலாபத்தில் மருத்துவமனையை நடத்தலாம்.

(நல்ல பரிந்துரை)

• முஸ்லிம் மக்களின் ஜக்காத் பணத்தை வசூலித்து, வசதியற்றோருக்கும் ஏழைகளுக்கும் அதிலிருந்து செலவு செய்து சிகிச்சை அளிக்கலாம்.

(ஜக்காத் பணத்தைப் பயன்படுத்துவதில் சில நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. அதனைச் செலவு செய்வதில் மார்க்க அறிஞர்களின் வழிகாட்டல் அவசியம்.)

• Project Study ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, சாதக பாதகங்களை ஆய்ந்து, முன்னேற்றப் பாதையில் வழிநடத்த வேண்டும். (ஏற்கனவே இந்த முயற்சியில் ஈடுபட்டு, அதில் ஓரளவு வெற்றியையும் அடைந்துள்ளதைத் தலைவர் குறிப்பிட, இதில் தனது படிப்பறிவையும் பட்டறிவையும் பயன்படுத்தி, நல்ல கருத்துக் கணிப்பையும் அதன் ஆய்வு முடிவையும் தந்துள்ள சகோதரர் மொய்னுத்தீன் அவர்களின் சுருக்கமான விளக்கமும் இக்கூட்டத்தில் இடம்பெற்றது.)

• பொதுமக்கள் டாக்டர்களின் கைராசியைப் பார்க்கிறார்கள். அதனாலும் ஷிஃபாவுக்குக் கூட்டம் வருவதில்லை. (இது போன்ற மனோநிலையில் இருப்பவர்களை நாம் மாற்ற முடியாது.)

• "பொதுமக்களின் இன்றைய trend, மருத்துவத்திற்காகப் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்குப் போகும் நிலையில் இருப்பதால், நாம் ஏன் ஷிஃபா மருத்துவமனையைப் பட்டுக்கோட்டைக்கு மாற்றக் கூடாது?" என்று ஒருவர் கேட்ட கேள்வி புதுமையாக இருந்தாலும், அதில் உள்ள சிரமங்கள் மற்றவர்களின் மாற்றுக் கருத்துகளுக்கு உட்பட்டு மறுக்கப்பட்டது.

• இந்த மருத்துவமனை ஊரின் மையப் பகுதியில் இருந்திருந்தால், இன்னும் மிகப் பயனுள்ளதாக இருந்திருக்கும்; எனவே, இதன் கிளை ஒன்றை ஊரின் மையப் பகுதியில் தொடங்கலாம்; பெரிய சிகிச்சைகளுக்கு இந்தத் தலைமை இடத்திற்கு வரலாமே என்ற புதுக் கருத்தொன்று முன்மொழியப் பட்டது. இதன் மூலம் மக்களிடையே நம்பிக்கை உருவாகும் என்ற பின்னூட்டமும் தெரிவிக்கப்பட்டது.

• தலைவரின் சஊதிப் பயணத்தின்போது, ஜித்தாவில் அதிரை மக்கள் சுமார் அறுபது பேர் கலந்துகொண்ட கூட்டத்தில், இருபத்தைந்து பேர் பொருளுதவி செய்து, ஷிஃபாவின் பங்குதாரர்களாவதற்குச் சம்மதித்ததைத் தலைவர் இடையில் குறிப்பிட்டார். அவர்களின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி, "நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!" என்ற கூற்றிற்கு ஒப்ப, ஆர்வமும் வசதியும் உள்ள நல்ல மக்களின் பொருளுதவியையும் வேண்டினார்.

• இறுதியாக, டாக்டர் கோமதி அவர்களின் சுருக்கமான – இதயத்தை ஈர்க்கும் சிற்றுரை அமைந்தது. "நான் வளர்த்த பிள்ளை இந்த ஷிஃபா" என்று அவர் கூறியபோது, நெஞ்சங்கள் நெகிழ்ந்தன. தமது எஞ்சிய காலத்தை இந்த மருத்துவமனைக்காக அர்ப்பணிக்க இருப்பதையும் டாக்டர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மக்களின் தவறான புரிதலையும் வதந்திகள் பரப்புதலையும் களைந்து, ஒரு முன்னேற்றப் பாதையில் ஷிஃபா நடை போடவேண்டும் என்று வாழ்த்தினார்.

கூட்ட முடிவில் நன்றி கூறப்பட்டு, பகல் 12.30 மணிக்கு அமர்வு நிறைவுற்றது.

-- அதிரை அஹ்மது

Nov 10, 2010

மறக்க முடியாத மருத்துவர்கள்


மருத்துவம், மருத்துவமனை பற்றிய கருத்தாய்வும் கருத்துக் கணிப்புகளும் நமதூரில் பேசப்படும் தருணமிது.  இந்நேரத்தில், நம்மூரின் பழமை பற்றியும் ஓர் ஆய்வு தேவைதானே?

கலந்தர் மரைக்காயர்:  (இவர்களைப்பற்றி ஏற்கனவே 'அதிரை வரலாறு' வலைப்பூவில் தனிக் கட்டுரை இடம்பெற்றுவிட்டது.  அதில் இடம்பெறாத சில தகவல்கள் மட்டும் இங்கே:)

கலந்தர் மரைக்காயர் இறந்த பிறகு, அவருடைய (மனைவி வழி) மூத்த மகன் சேகப்துல்லா காக்கா அவர்கள் தன்னால் இயன்ற, தனது அனுபவத்தின் மூலம் மருந்துக் கடை வைத்து, சில மருந்துகளைக் கொடுத்துவந்தார்.  கலந்தர் மரைக்காயரின் இளைய மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர்.  அவரும் சில நேரங்களில் 'தொப்பிக்குள் செந்தூரம் இருக்குது; தருகிறேன்' என்பார்.  மக்கள் பைத்தியத்திடம் எப்படி வாங்குவது என்று தயங்குவார்கள்.  அத்துடன் அந்தக் குடும்பத்தின் நாட்டு வைத்திய முறையும் முடிவுற்றது.

செந்தூரம் எனும்போது, சில தனித்தனி வீடுகளில் செந்தூரம் விற்பனையும்   நடந்ததை அறிவேன்.  அவற்றுள் 'செந்தூரக்கார வீடு' என்று பெயர் பெற்றது, இப்போதுள்ள எனது அண்டை வீடு.  'கூனா வீட்டு செந்தூரம்' என்பதும் நடுத்தெருப் பகுதியில் பெயர் பெற்ற ஒன்றாகும்.  அன்றைக்கு வந்ததோ, ஒரு சில நோய்கள்தாம்.  அவற்றுக்கெல்லாம் ஒரே மருந்து, சென்தூரம்தான். 

பெத்தையன்:  இவர் ஒரு நாட்டு வைத்தியர்.  இந்துவாக இருந்தாலும், நமதூர் முஸ்லிம் மக்களுடன், குறிப்பாக நமதூரின் சமூகத் தலைவர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தவர்.  நாடி பிடித்து நோயைக் கண்டுபிடிப்பதில் வல்லவர்.  மடியில் ரெடியாகச் சில மருந்துகளை வைத்திருப்பார்.  சற்று முதிர்ந்த நோய்களாயிருந்தால், அடுத்த நாள் செய்துகொண்டு வருவதாகச் சொல்லிப் போவார்.  கழுவித் துவைத்துப் பெட்டி போட்டு மடிப்புக் கலையாத வெண்மையான உடையுடன், தோளில் அங்கவஸ்திரத்தொடு காணப்படும் அந்தக் கருமைத் தோற்றமுடைய வைத்தியர் பெத்தையன், காசில்லா ஏழைகளுக்கும் காசுள்ள பணக்காரர்களுக்கும் தன மருத்துவச் சேவையைப் பாகுபாடின்றிச் செய்து பயன் விளைவிப்பார்.

இவர் அதிரை முஸ்லிம்களுடன் இணக்கமாக இருந்ததன் பிரதிபலனோ என்னவோ, அல்லது இவரால் பயன் பெற்ற நல்லடியார் ஒருவரின் துஆவினாலோ  என்னவோ, அவருடைய மகன் இஸ்லாத்தைத் தழுவி, இன்று முஸ்லிமாக வாழ்ந்துவருகின்றார்.  இப்போது அவரும் நாட்டு வைத்தியத் தொழிலை மேற்கொண்டு, தன்னால் இயன்ற பணிகளைச் செய்து வருகின்றார்.

இக்ராம் டாக்டர்:  எனக்குத் தெரிந்தவரை, முதன்முதலாக அதிரைக்கு வந்த ஆங்கில மருத்துவர் இவர்தான்.  அக்காலத்தில், அதிரையில் இவரிடம் மட்டுமே 'அம்பாசிடர்' கார் இருந்தது.  இப்போது இருக்கும் 'மக்தூம் பள்ளி'யின் இடத்தில்  அன்று 'ரிஜிஸ்டர் அபீஸ்' இருந்தது.  அந்த வரிசையின் கடைசிப் பகுதியில் டாக்டரின் மருத்துவமனை இருந்தது.  இக்ராம் டாக்டர் திருச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.  உருது தாய்மொழி.  அதிரையில் குடும்பத்தோடு குடியேறி வாழ்ந்து வந்தார்.  மிகவும் கண்டிப்பான ஆள்.  ஆனால், 'கைராசிக்காரர்' என்று பெயரெடுத்தவர்.  அதிரையின் செல்வந்தர் வீடுகளுக்கும், அவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் முதிர் நோயாளிகளுக்கும் மட்டும், அழைப்பின் பேரில் காரில் வந்து சிகிச்சையளிப்பார்.  வீட்டு வருகைக்காகக் கூடுதல் கட்டணம் ரூபாய் ஐந்து சேர்த்துக் கொடுக்கப்படும்.  அவரிடம் கம்பவுண்டராகப் பணியாற்றிய அப்துர்ரஹ்மான் இப்போதும் உள்ளார், செக்கடி மேட்டில் ஒரு சிறிய கடை வைத்துக்கொண்டு.  டாக்டரும் அப்துர்ரகுமானும் திரும்பி வந்த பிறகுதான், மருத்துவமனை மீண்டும் இயங்கத் தொடங்கும்.  அதுவரை நோயாளிகள் பொறுமை காப்பார்கள்!  இந்த டாக்டரை விட்டால் வேறு டாக்டர் இல்லை என்ற நிலைக்காக அன்று; இவர் கைராசிக்காரர் என்பதால்!

நாங்கள் எங்கள் உயர்நிலைப் பள்ளி நாட்களில் நடுத்தெருவில் 'இக்பால் நூல் நிலையம்' என்றொரு நூலகம் நடத்திவந்தோம்.  அந்த நேரத்தில்தான் அல்லாமா இக்பால் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பெற்றிருந்தது.  இளைஞர்களான இல்லை, சிறுவர்களான எம் உள்ளங்களில் நமதூரில் அல்லாமா இக்பாலின் நூற்றாண்டு விழா நடத்தினால் என்ன? என்ற உதிப்பு!  களத்தில் இறங்கிவிட்டோம்!  இடம்: மரைக்காபள்ளி முக்கூட்டு முனை!  பெரிய பந்தல்!  பேச்சாளர்கள்:  டாக்டர் இக்ராம் (உர்து).  'இறையருட்கவிமணி', பேராசிரியர் கா. அப்துல் கபூர் M.A. (தமிழ்).  மாநாட்டுத் தலைவர்:  அ. இ. செ. முஹிதீன் B.A.  இன்னும் உள்ளூர் பேச்சாளர்களும் சொற்பொழிவாற்ற, மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது!

டாக்டர் நெடுங்காடி:  மருத்துவ வசதிகள் குறைவாயிருந்த அந்தக் காலத்தில், நமதூர் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வந்து சேர்ந்தார் டாக்டர் நெடுங்காடி.  இவருடைய பொதுநலச்  சேவையின் மூலம் அரசு மருத்துவமனை அக்காலத்தில் புகழ் பெற்றிருந்தது. ஆனால் மருத்துவக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் மிகக் குறைவு.  அவற்றை வைத்துக்கொண்டு, அவர் தரும் சிகிச்சைகள் அபாரமானவை.

நான் மிகச் சிறிய வயதுடையவனாக இருந்தபோது, என் தாயாருக்கு உள்ளங்கையில் ஒரு சிறிய கட்டி.  அதை டாக்டரிடம் காட்டியபோது, ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும் என்றார்.  இப்போது இருப்பதைப்போல், ஆபரேஷன் தியேட்டர் மற்றும் உபகரணங்கள் எதுவும் இல்லை.  ஒரு மரக் கட்டிலில் படுக்க வைத்துத் தம் பொறுப்பை நிறைவேற்றத் தொடங்கினார் டாக்டர்.  என் கண்கள் நீர் வடிக்க, என் தாயைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.  கத்தி வைத்தாரோ இல்லையோ, கத்தத் தொடங்கிவிட்டார்கள் என் தாய்.  "ஐயா!  உட்ருங்கோ!" என்று கத்தியபோது பிஞ்சுப் பருவத்தினன் என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?  என்னைத் தடுத்துப் பிடித்து நிறுத்தத் தொடங்கிவிட்டார்கள் பக்கத்தில் நின்றவர்கள்.  அந்தக் காலத்தில் ஆபரேஷன் எல்லாம் தியேட்டரில் நடக்காது.  ஒரு விதமான rude treatmentதான்!  அப்படி இருந்தும், நோய்கள் குணமாகின!  டாக்டர் நெடுங்காடியும் கைராசிக்காரர்தான்.  அப்போதிருந்த dedication, kindness, concentration எல்லாம் மருத்துவர்களிடம் இப்போது குறைவு.   

ஜெர்மன் டாக்டர்:  இந்தப் பெயரில் ஒருவர் தன்னை டாக்டர் என்று கூறிக்கொண்டு நமதூர் தட்டாரத் தெருவில் இருந்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தன் 'தொழிலை' ஆரம்பித்தார்.  ஒரு நாள் திடீரென்று குழந்தையாக இருந்த என் மருமகளுக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது.  நானும் என் நண்பர் அப்துல் கபூரும் தூக்கிக்கொண்டு ஓடினோம், இந்த ஜெர்மன் டாக்டரிடம்.  எடுத்த எடுப்பில், அந்தப் பச்சிளங்குழந்தையின் நெஞ்சில் குத்தினாரே ஓர் ஊசி!  அதிர்ச்சியால் நாங்கள் உறைந்து போய்விட்டோம்!  குழந்தை அலறவே, அவளைத் தூக்கிகொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.  நடந்ததை வீட்டில் சொன்னபோது, வீட்டாரும் துடித்துப் போனார்கள்.  அல்லாஹ்வின் உதவியால் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை!  பிறகு தெரியவந்தது, அவர் போலி டாக்டர் என்பது!  கண்வலி என்றால் கண்ணில் குத்தியிருப்பாரோ?

மற்றவை, பின்னூட்டக்காரர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.       

-- அதிரை அஹ்மது

Nov 6, 2010

மழை காலத்தில் நம்ம ஊர் (பாகம் - 2)


கடும் காற்றடிக்கும், புயல் வந்து கரையைக்கடக்கும்
வெள்ளமோ ஊரை நன்கு வெளுத்துக்க‌ட்டும்
ம‌ழை நீர் வ‌ந்து வீட்டிற்குள் குடிபுகும்
தெருக்க‌ளெல்லாம் சேர், ச‌க‌தியில் க‌ட்டிப்புர‌ளும்

க‌டும் காற்றில் ம‌ர‌ங்க‌ள் ஆங்காங்கே மாண்டு போகும்.
நொறுக்குத்தீணிக்கு நா அலைபாயும்.
மாட‌ மாளிகையில் வீற்றிக்கும் நினைப்பில்
அடைம‌ழை க‌ண்டு உள்ள‌ம் ஆன‌ந்த‌ம‌டையும்

குளிர் காற்று வ‌ந்து உள்ள‌த்தை மெல்ல‌ கொல்லும்
நீள‌ வானை மேக‌க்கூட்ட‌ம் மேய்ந்து செல்லும்
வெண் கொக்கு கூட்ட‌ம் வானில் ப‌ற‌ந்து
யாருக்கோ ஓட்டு கேட்டு செல்லும்

மின்ன‌ல் வ‌ந்து ஊருக்கே மாத்தாப்பு கொளுத்தும்
இடிச்ச‌த்த‌ம் இறைவ‌னின் ச‌க்தியை ப‌றைசாற்றும்
சிறுவ‌ர் உள்ளமோ காகித‌ ஓட‌மிட்டு இக்கான‌க‌த்தை சுற்றிவ‌ரும்
தும்பிகள் வானில் ப‌ற‌ந்து சிறு த‌ம்பிக‌ளை உற்சாக‌மூட்டும்.

காளான்க‌ள் ம‌ல‌ர்ந்து யாருக்கோ குடை பிடிக்கும்.
ப‌ச்சைபாசி ஆங்காங்கே தோன்றி ஊருக்கே போர்வை விரிக்கும்
அடுப்பெறிக்க உதவும் விற‌குக‌ள் அழும்பு ப‌ண்ணும்.
சோவென‌ பெய்யும் மழை சோம்ப‌லுக்கு பாய் விரிக்கும்.

சொட்டென‌ விழும் ம‌ழை நீர் ம‌ன‌திற்கு சொட்டு நீர்ப்பாய்ச்சும்
ம‌ழையில் ந‌னைந்த‌ காக‌ம் வெயிலுக்கு ஏங்கும்.
க‌ருமேக‌ம் கிழ‌க்கே தோன்றி வீடு க‌ட்டுவோரை ப‌ய‌முறுத்தும்
ப‌ழைய‌ சோற்றில் செய்த முறுக்கு வான‌ம் பார்க்க‌ அஞ்சும்

வெண்ப‌னி மூட்ட‌த்தில் வீட்டு ம‌ர‌ங்க‌ள் த‌லைதுவ‌ட்டிக்கொள்ளும்
ஊரோ இருளில் மூழ்கும் உள்ள‌மோ உற்சாக‌த்தில் மிளிரும்
ப‌ள்ளி விடுமுறையை எண்ணி எங்கோ ப‌ற‌ந்து செல்லும்
பண‌ங்காசுக‌ள் இல்லாம‌ல் இப்பாருல‌கை சுற்றித்திரியும்
முட‌ங்கிக்கிட‌க்கும் ந‌ம்மை ப‌ள்ளியின் பாங்கொலி த‌ட்டி எழுப்பும்.

இக்கால‌ங்க‌ள் க‌ச‌த்தாலும் அக்கால‌ங்க‌ளை எண்ணி இனிமை/இளமை கொள்வோம் என்றும் ம‌ற‌வோம்.

ம‌ழை கால‌த்தில் ந‌ம்ம‌ ஊர் ம‌ன‌திற்குள் ஓர் க‌ற்ப‌னை செய்து பார்(ப்போம்.)

--- மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

Oct 19, 2010

அதிரை வரலாற்றில் நான் கண்ட நல்லவர்கள்!

"இறந்து போனவர்களின் நற்செயல்களைப் பற்றியே நினைவுகூருங்கள்" என்ற கருத்துப்பட நபிமொழியொன்று உண்டு. நல்லதுபற்றிப் பேசுவதால், நன்மையின் பக்கம் நாட்டம் உண்டாகின்றது. தீமையைப்பற்றிப் பேசுவதால், சில வேளை தீமையின் பக்கம்கூட நம் கவனம் செல்லக் கூடும். எனவே, நன்மைகளை நினைவுகூர்வதே நமக்கு நன்மை பயக்கும். இவ்வடிப்படையில், எனது வாழ்க்கையில் சந்தித்த நல்லவர்களைப்பற்றி அதிரை வரலாற்றில் பதிவு செய்து வைப்பது நலம் என்ற நோக்கில், மிகச்சிலரைப்பற்றி எனக்குத் தெரிந்த சில தகவல்களை மட்டும் பதிவு செய்ய விழைகின்றேன்.

இத்தொகுப்பைப் படிக்கும் வாசகர்களுக்கு, இவர்களைவிட இன்னும் பலரும் நினைவில் நிழலாடலாம். அவ்வாறு இருந்தால், அவர்களைப்பற்றிக் கட்டாயம் பின்னூட்டம் இடுமாறு அன்புடன் கோருகின்றேன். இதில் இடம் பெறாதவர்கள் கெட்டவர்களா என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். நினைவாற்றல் குறைந்த எனது சிற்றறிவில் நிலைத்திருப்பவர்கள் பற்றிய தொகுப்பே இது.

மர்ஹூம் அப்துஸ்ஸலாம் ஹாஜியார் கடல்கரைத் தெரு

நான் இவர்களைச் சந்தித்தபோது, நன்கு பழுத்த பழம் போன்று, வயதான நிலையில் இருந்தார்கள். அப்போதும், உள்ளூரில் நடந்தே வியாபாரம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். இவர்களின் வணிகப் பொருள்கள்: தொப்பி, மிஸ்வாக், அத்தர், சுர்மா போன்றவை. பொருள்களின் அடக்க விலையை முதலில் சொல்லி, இலாபமாகத் தமக்கு நாலணாவைச் சேர்த்துத் தருமாறு வாங்குபவர்களிடம் சொல்லிவிடுவார்கள். இப்பெரியார், நம் தஸ்தகீர் சகோதரர்களின் பாட்டனார் என்பது குறிப்பிடத் தக்கது!

மர்ஹூம் அஹ்மது தம்பி கடல்கரைத் தெரு

இவர்களை, 'தூண்டிமுள் யாவாரி' என்றுதான் மக்கள் அழைப்பர். இவர்களின் சம்பாத்தியம், தூண்டிமுள் விற்பது. அதிரையை ஒட்டிய கடலோரப் பகுதிகளுக்குச் சென்று, அங்கெல்லாம் வாழ்ந்த மீனவச் சமுதாயத்திடம் தூண்டிமுள் விற்பார்கள். இவர்கள் வியாபாரத்திற்காக வெளியூர் செல்லும்போதும், உள்ளூரில் இருக்கும்போதும், எப்பொழுதுமே இஸ்லாமியப் பிரச்சாரம்தான் செய்துகொண்டிருப்பார்கள். ரயிலில் ஏறி அமர்ந்துவிட்டால், அந்தக் 'கம்பார்ட்மென்டில்' இருப்பவர்களோடு மிகத் தோழமையுடன் மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிடுவார்கள். இதுவன்றி, உள்ளூரிலும் அவ்வப்போது பள்ளிவாசல்களில், யாருடைய அனுமதியையும் எதிர்பார்க்காமல், தமக்குத் தெரிந்தபடி 'பயான்' செய்வார்கள். இவர்களின் அணுகுமுறை, சிலருக்குப் பிடிக்காது. என்றாலும், அத்தகையவர்களிடமும் அன்புடன் நெருங்கிப் பழகுவார்கள். ஊரிலும் வெளியூர்களிலும் தம்மிடம் தம் வணிகப் பையை எப்போதும் வைத்திருப்பார்கள். இவர்கள், 'புஷ்ரா ஹஜ் சர்வீஸ்' உரிமையாளர் அப்துர்ரஸ்ஸாக் ஹாஜியாரின் தாய்மாமாவார்கள்.

இதே தெருவில், 'அபூசாலிஹ்' என்ற இன்னொருவரும் இருந்தார்கள். இவர்களை அத்தெருவாசிகள், 'அபுசாலி மாமா' என்று அன்போடு அழைப்பார்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு உடையவர்; துணிச்சலானவர். இவர்களைப்பற்றிக் கூடுதலாக எனக்குத் தெரியாது. மொத்தத்தில், நல்ல மனிதர்களுள் இவரும் ஒருவர்.

மர்ஹூம் அப்துஹை சின்ன நெசவுத் தெரு

கடைதெருவில் நாட்டு மருந்துக் கடை நடத்தி, மக்களுக்கு மருத்துவப் பணி செய்த ஆள் இவர்கள் ஒருவர்தான். இவர்களின் உறவினர் ஒருவர் மூலம் நான் கேட்ட செய்தி: இவர்களின் மரணப் படுக்கையின்போது, வீட்டுப் பெண்களைத் தமக்கு 'யாசீன்' ஓதும்படிக் கேட்டார்களாம். அதன்படி, அவர்கள் ஓதி முடித்தபோது, 'போதும்' என்பது போல் கையால் சைகை காட்டி, வானத்தின் பக்கம் ஒரு விரலை உயர்த்தியபின், இவர்களின் உயிர் பிரிந்ததாம்!

மர்ஹூம் மீராசாஹிப் மேலத்தெரு

இவர்களைச் சிறுவர் சிறுமியர், 'மிட்டாய் மீராசா' என்றே அழைப்பர். காரணம், இவர்களின் தோளில் கனத்த பை ஒன்று தொங்கும். அதில் நிறைய மிட்டாய் இருக்கும். அந்த மிட்டாய்களைப் பிள்ளைகளுக்குக் கொடுத்து,"சொல்லுங்கள், லாயிலாஹ இல்லல்லாஹ்!" என்று கூறிக்கொண்டே போவார்கள். இவர்கள் ஓட்டிக்கொண்டு வரும் சைக்கிளில் ஒரு வேட்டைத் துப்பாக்கி தொங்கும். ராணுவ வீரர் போன்ற உடை அணிந்திருப்பார்கள். முன்பு ராணுவத்தில் பணி புரிந்திருக்கக்கூடும். இவர்களின் உறவினர்கள் ஒரத்தநாட்டிலும் இருப்பதாகக் கேள்வி. இவர்கள் மேலத்தெரு ஜின்னா, மலக்கா மஜீத் ஆகியோரின் தந்தை ஆவார்கள்.

மர்ஹூம் அல்ஹாஜ் முஹம்மது அலிய் ஆலிம் (பாகவிய்) நடுத்தெரு

குர்ஆனை முறையாகத் 'தஜ்வீது' சட்டப்படி மனனம் செய்த 'ஹாஃபிஸ்'. இரு அரபிக் கல்லூரிகளில் பயின்று, மார்க்கச் சட்டங்களில் தேர்வு பெற்ற 'ஆலிம்'. அரபிக் கல்லூரியில் பட்டம் பெற்று ஊருக்கு வந்த தொடக்க காலங்களில், புரட்சிகரமாக மார்க்கச் சட்டங்களை மக்களுக்குத் தம் செயல்பாடுகளால் எடுத்துரைத்து, உண்மையை உணர்த்திய அறிஞர். அதற்கு ஓர் உதாரணம்: நாட்டு நடைமுறையில் உள்ள ஐவேளைத் தொழுகைகளுக்குப் பின் ஓதும் கூட்டு துஆ தொழுகையில் உள்ளதன்று என்பதை உணர்த்த, தாம் இமாமாக நின்று தொழவைத்த தொழுகை ஒன்றில் 'சலாம்' கூறித் தொழுகையை முடித்தவுடன் அவர்கள் எழுந்துவிட்டதை நான் கண்டுள்ளேன். ஆண் மக்களை 'அம்போ' என்று விட்டுவிட்டுப் பெண் மக்களுக்கே வீட்டையும் சொத்தையும் கொடுக்கும் ஊர்ப் பழக்கத்தை வன்மையாகச் சாடியவர்கள் இவ்வறிஞர். 'அலி' என்று தமது பெயர் அனர்த்தப்படாமல் இருக்க, உச்சரிப்புச் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக, 'அலி' என்பதை, 'அலிய்' என்று எழுதி மாற்றம் வருத்திய மனிதர் இவர். சில காலம், நமதூர் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் 'தீனியாத்' ஆசிரியராகப் பணியாற்றிச் சேவை செய்துள்ளார்கள். அதனால், இந்தத் தலைமுறை மாணவர்களுள் பலருக்கு மிகவும் அறிமுகமானவர்கள் இந்த 'அலியாலிம்சா'. கொள்கை விஷயத்தில் அவர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களின் 'வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு' என்ற மறைவற்ற பேச்சு (Frank talk) பலருக்குப் பிடிக்கும். குறிப்பாகத் தம்பி ஜமீலுக்கு. "அலிய் ஆலிம்சா, 'மப்ரூக் கார்கோ' உரிமையாளர் அப்துல் கரீமின் பாசமிகு தந்தையாவார்"
மர்ஹூம் ஷரஃபுத்தீன் ஹாஜியார் தட்டாரத் தெரு

'ஒற்றுமைச் சகோதரர்கள்' என்ற பெயருக்குச் சொந்தமானவர்கள், இவர்களும் இவர்களின் தம்பி (மர்ஹூம்) அப்துல்ஹாதி அவர்களுமாவர். அண்ணனும் தம்பியும், சொல்லி வைத்தாற்போன்று, அடுத்தடுத்துச் சில நாட்களில் இறந்தனர். பணக்காரராக இருந்தும், சிறிதளவும் பெருமையில்லாத அற்புத மனிதர்! கொழும்பில் இருந்த 'ஏ.எஸ்.எம். ஹாஜியார் & சன்ஸ்' என்ற நிறுவனத்தின் உரிமைப் பங்குதாரராக இருந்த இவர்களிடம் பணி புரிந்த ஒருவர் சொன்ன தகவல் ஒன்று: கம்பெனியில் வேலை செய்த பணியாளர்களுள் எவரேனும் தவறு செய்தால், அதை இவர்கள் திருத்தும் பாணியே வேறு. "ஏன் இப்படிச் செய்தாய்?" என்று கேட்கமாட்டார்களாம். "தம்பி இப்படிச் செய்திருக்கலாமே?" என்று கேட்டு, தவறிழைத்தவர் தன் தவற்றை உணரும்படிச் செய்வார்களாம்!

மர்ஹூம் ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் ஆஸ்பத்திரித் தெரு

இவர் காலத்தில் இருந்த ஊர்த் தலைவர்களுள் இவர் குறிப்பிடத் தக்கவர். ஏன்? இவர்களின் வீடு இருக்கும் ஆஸ்பத்திரித் தெரு முனையிலிருந்து நடுத்தெருவின் கடைசியிலிருக்கும் மரைக்கா பள்ளிக்கு நடந்தே வந்து, தம் நண்பர்களுடன் அமர்ந்து, தம் விவேகமான கருத்தாடல்களால், அவர்களைச் செவிமடுக்கச் செய்பவர். சிக்கலான சமூகப் பிரச்சினைகளுக்குத் தமது 'இராஜ தந்திரமான' ஆலோசனைகளைக் கொண்டு தீர்ப்பு வழங்க உதவிய முதிர்ந்த அறிவாளி. மத்தியஸ்தம் செய்வதில் நுணுக்கமானவர். சிரிக்க வைப்பார்; சிந்திக்கவும் வைப்பார்.

மர்ஹூம் அப்துர்ரஹீம் கீழத்தெரு

கடைத்தெருவில் வியாபாரியாக இருந்தாலும், கடமையான தொழுகையை, அதனதன் நேரத்தில், பள்ளிவாசலுக்கு வந்து தொழுதுவந்த நல்ல மனிதர். நம் 'கணினிச் செம்மல்' தம்பி ஜமீலின் பெரிய வாப்பா.

மர்ஹூம் சோமப்பா நடுத்தெரு

'சோமப்பா' என்றவுடன், இன்றுகூட, எங்களுக்கு அவித்த கொண்டைக் கடலைதான் நினைவுக்கு வருகின்றது! 'சேகு முஹம்மது அப்பா' என்ற இயற்பெயர்தான், 'சோமப்பா' எனச் சுருங்கிவிட்டது. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் மரைக்கா பள்ளியை நோக்கி வந்து, 'பாங்கு' மேடைக்குப் போய், 'சலவாத்' ஓதத் தொடங்கிவிடுவார்கள். பகல் வேளைகளில், வீட்டிலிருந்து கொண்டைக் கடலையை அவித்துக்கொண்டு கிளம்பி, தாம் செல்லும் வழியிலிருக்கும் வீடுகளுக்கும் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து, பாசத்தைப் பொழிவார்கள். இவர்களின் சந்ததிகள் (சின்னமச்சி வீடு) வளமாக வாழ்வதற்கு, இப்பெரியாரின் துஆவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

மர்ஹூம் அல்ஹாஜ் அப்துஷ்ஷகூர் ஆலிம் தட்டாரத் தெரு

நாங்கள் பள்ளி-கல்லூரி மாணவர்களாக இருந்த காலங்களில் எங்களுக்கு மார்க்க வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்கள். 'அப்துஷ்ஷுக்கூர் ஹாஜியார்' என்றே பிரபலமான இவ்வறிஞர், தேர்ந்த மார்க்க அறிஞர் (ஆலிம்) என்பது பலருக்குத் தெரியாது! தாய்மொழியான தமிழைத் தவிர, ஆங்கிலம், அரபி, உர்தூ முதலிய மொழிகளிலும் புலமை பெற்றவர். 'தப்லீக்' என்ற தீனுடைய உழைப்பில், உண்மையிலேயே 'உழைத்தவர்' என்று சொல்வதற்கு மிகப் பொருத்தமானவர். உலக நாடுகள் பலவற்றுக்குச் சென்று தீனுடைய உழைப்பைச் செய்தவர். தனிமையில் இவர்களிடம் பேசும் வாய்ப்பு எனக்குப் பல முறை கிட்டியது. அந்நேரங்களில் இவ்வறிஞரின் வழிகாட்டல்கள் எனக்குப் பயனுள்ளவையாக இருந்துள்ளன. பேணுதல், ஈடுபாடு என்பவற்றை இவர்களிடம் நான் நேரில் கண்டுள்ளேன்: கற்றுள்ளேன்.

என் நினைவில் வந்தவர்களைத் தொகுத்தேன். இதில், உண்மையாளராகவும், உழைப்பாளராகவும், எளிமையாளராகவும், உண்மையுரைப்பதில் துணிச்சலானவராகவும், சேவையாளராகவும், அன்பாளராகவும், செழுமையிலும் செம்மையாளராகவும், நுண்ணிய அறிவாளராகவும், வணக்கவாளியாகவும், சிறார்களிடம் அன்பு பாராட்டுபவராகவும், சிறந்த சிந்தனையாளராகவும் இருந்தவர்களைப் பற்றிய சிறு சிறு அறிமுகத் தகவல்களைத் தந்துள்ளேன். நம் வாசகர்கள் தம் பெற்றோர் அல்லது பெரியோர் மூலம் அறிந்த நல்லவர்களைப் பற்றியும் பின்னூட்டம் இடுங்களேன், பார்ப்போம். அத்தகையவர்கள் மறைந்த மாண்பாளர்களாக இருக்கட்டும்.

- அதிரை அஹ்மது

00 91 98 94 98 92 30

Oct 18, 2010

நம்மூரில் காணாமல் போன பழக்க,வழக்கங்கள்.


உலகை நவீன தொழில் நுட்பமயம் ஆட்டிப்படைத்து ஆட்சி செலுத்தி வருவதை நாம் அறிவோம். அதன் தாக்கம் பெருநகரங்கள் முதற்கொண்டு, சிற்றூர்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் படிப்படியே சென்றடைவதை நாம் பல விசயங்களில் பார்த்து வருகிறோம். அதன் சாரமாக நம்மூரில் காணாமல் போன சில பழக்க, வழக்கங்களை இங்கு முடிந்த வரை ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்தலாம் என்று விரும்புகிறேன்.


1. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கும் இரவு நேரங்களில் பள்ளிகளின் பாங்கு கொடுத்த பின் அடிக்கப்படும் நஹராக்களின் ஒலி இன்று பெரும்பாண்மையான பள்ளிகளில் 'இன்வெண்ட்டர்' வந்த பிறகு கேட்க முடியவில்லை.

2. வீட்டின் பல விசேச தருணங்களில் மற்றும் சம்மந்தி வீட்டாரை சந்தோசப்படுத்த வீட்டிலேயே ஆள் வைத்து அல்லது ஆள் வைக்காம‌ல் மாவு இடித்து சுட்டுத்த‌ர‌ப்ப‌டும் பூவ‌டை, நானா ஹ‌த்த‌ம், அரிய‌த‌ர‌ம், குழ‌ல் ப‌ணியான், பூவந்தி, முட்டாசு, மைசூர் பாக்கு, வெங்காய‌ப்பணியான், சாதா ஹ‌ல்வா, பீட்ரூட் ஹ‌ல்வா போன்ற‌வைக‌ள் இன்றும் வீடுக‌ளில் உண்டாக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌வா என்று தெரிய‌வில்லை. (பெண் வீட்டாரை வ‌த‌க்காம‌ல் இப்ப‌ழ‌க்க‌த்தை விட்டு விட்டோம் என்று அறிய‌ப்ப‌ட்டால் மிக‌ ச‌ந்தோச‌ம் தான். அத‌ற்காக‌ ந‌ம் எல்லோரையும் ப‌ட்டினி போட்டு விடாதீர்க‌ள் என்று யாரும் கேட்க‌ மாட்டீர்க‌ளே?)

3. சிறுவ‌ர்க‌ளாக‌ இருந்த‌ நாம் விளையாடி க‌ழித்த‌ ப‌ளிங்கு, ப‌ட்ட‌ம், ப‌ம்ப‌ர‌ம், பேபே, தொட்டு விளையாட்டு, க‌ண்டு விளையாட்டு, தேர்த‌ல் வாக்கெடுப்பு, க‌யிறு ர‌யில் வ‌ண்டி, நொங்கு கோம்பை வ‌ண்டி, ட‌ய‌ர் வ‌ண்டி, அட்ட‌பில்லு போன்ற‌ விளையாட்டுக்க‌ள் பெரும்பாலும் ஒழிந்து விட்ட‌ன‌. எல்லாம் க‌ம்ப்யூட்ட‌ர், செல்போன் ம‌ய‌மாகி விட்ட‌ன‌.

4. க‌லியாண‌ம் முடிந்து ஒரு வார‌ம் அல்ல‌து ப‌த்து நாட்க‌ள் மாப்பிள்ளையுட‌ன் கூட‌ வ‌ந்து மூன்று வேளையும் ஒரு க‌ட்டு க‌ட்டிவிட்டு (சாப்பாடு) பெண் வீட்டாரின் மறைமுக வதுவாப்பேரு (பத்வா)எடுத்துச்செல்லும் மாப்பிள்ளை தோழ‌ன்மார்க‌ள் சாப்பாடு இன்று ஓரிரு நாட்க‌ளிலே முடிந்து விடுவ‌து ஒரு ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் தான். அல்ஹ‌ம்துலில்லாஹ்.. முற்றிலும் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒன்று.

5. பெரிய‌வ‌ர் முத‌ல் சிறிய‌வ‌ர் வ‌ரை ந‌ம‌தூர் குள‌ங்க‌ளில் குளிப்ப‌து, கும்மாள‌ம் அடிப்ப‌து குறைந்து அல்ல‌து ம‌றைந்து விட்ட‌து.

6. ஒன்றுமேயறியாத ப‌டித்துக்கொண்டிருக்கும் சிறுவ‌ர்க‌ளைப்பிடித்து அவ‌ர்க‌ளுக்கு வ‌ருங்கால‌த்தில் திரும‌ண‌ம் முடிக்க‌ இருக்கும் பெண்ணை முடிவு(அசைன்) செய்து 'நிக்காஹ்' என்னும் திரும‌ண‌ முன் உறுதி ஒப்ப‌ந்த‌ம் செய்து வைப்ப‌து இப்பொழுது குறைந்து அல்ல‌து ம‌றைந்து விட்ட‌தாக‌ க‌ருதுகிறேன்.

7. சிறுவ‌ர்க‌ளுக்கு 'சுன்ன‌த்' செய்ய‌வ‌த‌ற்கு முன் வீட்டில் வ‌ச‌தி வாய்ப்புக‌ள் இருக்கிற‌தோ இல்லையோ அல‌ங்கார‌ வாக‌ன‌ ப‌வ‌னி தெருதோறும் பைத்துச‌பா இசை முழ‌ங்க‌ வ‌ருவ‌து இப்பொழுது முற்றிலும் குறைந்து விட்ட‌தாக‌ க‌ருதுகிறேன். ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் தான் மாஷா அல்லாஹ்.

8. வீடுகளின் முற்றத்தில் உரலை வைத்து நான்கு புற‌மும் புட‌வையை சுவ‌ராக‌ எழுப்பி ந‌டுவில் சிறுவ‌ர்க‌ளை உட்கார‌ வைத்து அவ‌ர்க‌ள் க‌த‌ற‌, க‌த‌ற‌ நாசுவ‌னை வைத்து 'சுன்னத்' செய்யும் முறை இப்பொழுது முற்றிலும் இல்லை என‌ க‌ருதுகிறேன்.

9. புதிய‌தாக‌ வெளிநாடு ப‌ய‌ண‌ம் செய்ய‌ இருக்கும் ந‌ப‌ர்க‌ளின் வீட்டில் ச‌ல‌வாத்நாரியா ஓதி நார்சா கொடுக்கும் வ‌ழ‌க்க‌ம் நின்று போய் விட்ட‌தாக‌ க‌ருதுகிறேன். (வீட்டுக்கு வ‌ருகிற‌வ‌ர்க‌ள் ந‌ன்றாக‌ மூக்குபிடிக்க‌ உண்டு செல்வார்க‌ள். பாவ‌ம் ச‌புராளி சைத்தான் கோளாறு உள்ள‌வ‌ன் போல் காட்சி த‌ருவான்).

10. இக்கால பெண்கள் அவர்கள் சிறுமிகளாக இருக்கும் பொழுது விளையாடிக்களித்த கலச்சிக்காய், சில்கோடு, பல்லாங்குழி, புளியங்கொட்டை, கொலெகொலெயா மந்திரிக்கா நரிநரியா சுத்திவா விளையாட்டுக்கள் எல்லாம் கண்மாசியா (முற்றிலும்) காணாமல் போய் விட்டது இக்கால சிறுவர், சிறுமியரிடம்.

11. நமது வீட்டில், குடும்பத்தில், தெருவில் யாரேனும் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டால் நமதூர் ரயிலடி (ரயில்வே ஸ்டேசன்) வரை ஆண்களும், பெண்களும் புடைசூழ வந்து ஹாஜிகளுக்கு மாலை அணிவித்து பைத்து ஓதி புனித பயணத்தை சிறப்புடன் இறைவன் கிருபையில் முடித்து வீடு வந்து சேர து'ஆச்செய்து அனுப்பியது இப்பொழுது இருக்கிறதா? அல்லது இல்லாமல் போய் விட்டதா? தெரியவில்லை. (எப்படி இருக்கும்? கம்பன் எக்ஸ்பிரஸ் தான் கண்மாசியாக்காணாமல் போய் விட்டதே....)

12. இப்பொழுது நமதூரில் மாணவ, மாணவியர் எல்லாம் வண்ண,வண்ண சீருடை அணிந்து பள்ளிக்கூடம் சென்று வருகின்றனர். பார்ப்பதற்கே மனதிற்கு சந்தோசமாக இருக்கின்றது. நாம் படிக்கும் காலத்தில் பத்தாம் வகுப்பு வரை கலர் வேட்டியும், பதினொன்றாம் வகுப்பிலிருந்து வெள்ளை வேட்டியும் உடுத்தி வர பள்ளி நிர்வாகமே அனுமதித்திருந்தது. அதை இப்பொழுது நினைத்தாலே வெட்கமாக இருக்கிறது. (இப்பொழுது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் குடியுரிமை பெற்றிருக்கும் நம்மூர்க்காரர்களின் பள்ளிப்பருவ புகைப்படங்களை குடியுரிமை வழங்கிய அந்நாட்டு அதிகாரிகள் பார்க்க‌ வாய்ப்பு கிடைத்தால் கொடுக்கப்பட்ட அக்குடியுரிமையை அவர்கள் திரும்பப்பெற்றுக்கொண்டாலும் பெறலாம். அவ்வளவு அழகாகவும், நாகரீகமாகவும் இருக்கும். (சிலர் பழைய ஊதா தொப்பியுடனும் காட்சியளிப்பர்).

13. வீட்டினருக்கு தெரியாமல் கள்ளத்தனமாக‌ பார்த்துவந்த‌ (ஜெக்கரியா, நியூ சினிமா திரையரங்குகள்) சினிமாவும், குடித்த ஒட்டு பீடியும் பெரும்பாவமாக கருதப்பட்ட காலம் அது. தொலைக்காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும் வீட்டை சைத்தான் குடிவந்த வீடாக பேசப்பட்ட நேரம் அது. அக்காலத்துடன் ஒப்பிடும் பொழுது இன்றோ எல்லை மீறிய பாவங்கள் பரவலாக நடந்துவருவதை காணாமல் இருக்க முடியவில்லை.

14. வீட்டில் நடை பெற இருக்கும் கலியாண வைபவங்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வீட்டின் பெரியவர்கள் ஒன்று கூடி (டீ, மிக்ஸர், பனியான் துணையுடன்)பத்திரிக்கைகள் எழுதி முதலில் அயல்நாடுகளில் இருக்கும் உறவினர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு, பிறகு உள்ளூர் உற்றார், சுற்றத்தாருக்கு அனுப்பப்படும். இக்காலத்தில் அவைகளெல்லாம் குறைந்து அல்லது மறைந்து வாய்க்கூப்பாடு, டெலிபோன் கூப்பாடு, ஈமெயில் கூப்பாடு, சாட்டிங் கூப்பாடு, இன்டர்நெட் கூப்பாடு என்று பரிணாம வளர்ச்சி பெற்று விட்டது. இதை தொழிலாக செய்து வந்தவர்களுக்கு பேரிடியாக அமைந்தது. எப்படி குதிரை வண்டிகளெல்லாம் ஆட்டோக்களாக பரிணாம வளர்ச்சி பெற்றதோ அது போல் தான் இதுவும்.

15. அன்று வீடுதோறும் தண்ணீர் நிறம்பிய கிணறுகள் இருந்தன‌. இன்று அவைகளெல்லாம் மறைந்து ஆழ்குழாய்க்கிணறுகளாக வந்து நம் வீட்டை ஆட்சி செய்வதுடன் குளங்களின் தண்ணீர் இருப்புக்கும் வேட்டு வைக்கிறது. அன்று கிணற்றில் பயன்படுத்தப்பட்ட வாளியும், கயிறும் அதன் இரும்பு சக்கரமும் விரைவில் அழிந்துபோன பொருட்களின் வரிசையில் அருங்காட்சியகத்தில் காணப்படலாம்.

16. ஒரு காலத்தில் நமக்கு வரும் சளித்தொல்லை, இருமல், காய்ச்சல், ஜலதோசங்களெல்லாம் ஆஸ்பத்திரி சென்று ஒரு ஊசி போட்டு வந்தால் அவை நம்மை விட்டு காணாமல் போய் விடும். ஆனால் இன்றோ எத்தனை ஊசி போட்டு வந்தாலும், மருந்து மாத்திரைகள் தின்றாலும் அவைகள் நம் அன்றாட வாழ்வில் தொட்டு விளையாட்டு விளையாண்டு வருகின்றன. (இக்கால மருந்துக்கு வீரியம் குறைந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன என சொல்ல வந்தேன்).

17. அன்றாட சமையலுக்காக நம் வீட்டில் பயன்படுத்தப்பட்ட அலாயத்திக்காட்டு விறகுகளும், சைக்கிளின் பின் கேரியரில் கட்டி வாங்கி வந்த விறகுகடை சவுக்கு விறகுகளும் இன்று கலியாண வைபவங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் பொருளாக மாறிப்போனது. குறிப்பாக அலயாத்திக்காட்டு விறகுகள் இன்று அடியோடு இல்லாமல் போய்விட்டதாக கூறலாம். அன்று ஆடம்பரப்பொருட்களின் வரிசையில் பவனி வந்த கேஸ் அடுப்புகள் இன்று இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம்.

18. அன்று டி.வி.எஸ். 50 (மொபெட்) வைத்திருந்தாலே பணக்காரர்களின் வரிசையில் வலம் வந்தவர்கள் இன்று இன்னோவா இல்லை ஃபர்ச்சூனர் வைத்திருந்தால் மட்டுமே ஏதோ உப்புக்கு சப்பானி போல் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பணங்காசுகள் பெருகி அதற்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டது என சொல்ல வந்தேன்...

19. ஒரு காலத்தில் நமதூர் ஜாவியாவில் பயான் முடிந்து இறுதியில் கொடுக்கப்படும் நார்சா சோறு ஆரம்ப காலத்தில் மண் சட்டியிலும், பிற‌கு சில்வர் கிண்ணத்திலும் இறுதியில் பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்பட்டு பரிணாம வளர்ச்சி அடைந்தது போல் இன்னும் பல பழைய பழக்க,வழக்கங்கள் நாகரீக உலகை காரணம் காட்டி நம்மைவிட்டு நலுவிச்சென்றுவிட்டன.

20. ஒரு காலத்தில் ட்ரங்கால் புக் பண்ணி டெலிபோனுக்காக காத்துக்கிடந்த நாம் இன்று எல்லோரின் கைககளிலும் செல்போன் துள்ளி விளையாடுவதை தவிர்க்க முடியவில்லை.

21. அன்புக்கடிதங்களும், ஆசை வாழ்த்துக்களும், மணியார்டருகளும் கொண்டு வந்து நம் வீட்டில் கொடுத்துச்சென்ற தபால்காரர்கள் இன்று இருக்கலாம். ஆனால் அப்பழக்க,வழக்கங்களெல்லாம் மலையேறி சென்று விட்டதாக அடித்தும் கூறலாம் அடிக்காமலும் கூறலாம். இதில் தோனா.கானா முறையும் அடங்கும்.

இன்னும் நம்மிடம் அன்றாட வாழ்வில் பின்னிப்பிணைந்திருந்த எத்தனையோ பழக்க,வழக்கங்கள் விஞ்ஞான மாற்றத்தை காரணம் காட்டி இன்று நம்மிடமிருந்து பிரியா விடைபெற்று சென்று விட்டன. அதில் சில எனக்கு ஞாபகம் உள்ளதை மேலே வரிசைப்படுத்தியுள்ளேன். மேற்கண்டவற்றில் யாரையும் புண்படுத்த வேண்டுமென்றோ அல்லது உட்கருத்து ஏதேனும் வைத்தோ எதுவும் எழுதப்படவில்லை.

இஸ்லாத்திற்கு முரணான‌ பல தீய பழக்க,வழக்கங்கள் நாளடைவில் நம்மை விட்டு காணாமல் போயிருந்தால் அதற்காக நாம் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக சந்தோசப்பட வேண்டியது தான்.

விடுபட்ட பழக்க,வழக்கங்களையும், உங்கள் மேலான கருத்துக்களையும் இங்கு பின்னூட்டமாக இட்டு தொடர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பழைய ஞாபகங்களை ஓரளவு மறக்காமல் இங்கு வழங்க பேருதவி புரிந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என்று அவனிடம் பிரார்த்தித்தவனாக இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.

வஸ்ஸலாம்.

-- மு.செ.மு. நெய்னா முஹம்மது

Sep 28, 2010

அதிரையின் அசத்தல் மொழி

<>
<>
நெத்திரை   தூக்கம்
வெலங்கலே      புரியவில்லை
தேதண்ணி   தேநீர்
வர்ரவோ / வர்றாக வருகின்றார்
வாபுச்சி  / வாபுச்சாதந்தையின் ம்மா
உச்சி உறுமநேரம்பகல் 12  மணி
மாலை மகதி நேரம்மகரிப் நேரம்
செரவடி /சடபுடம்தொந்தரவு
கூளம்குப்பைகள்
எறச்சி ஆனம்ஆட்டுக்கறி குழம்பு
ஈக்கிதுஇருக்கிறது
கலரி சாப்பாடுகல்யாண விருந்து
பவலுபகல் 
 யாஹ்வம்நினைவு 
பசியாறுதல்காலை உணவு
அளிமாலுஅலமாரி
உம்மம்மாதாயின் அம்மா 
பச்சை பாலவன்சிறு வயது பிள்ளை
புளியாணம் ரசம்
களிச்சல்லே  போவான்ஒரு வகை நோய்( lose motion )
காலம் காத்தாலேகாலையில்
வெரசா வாஉடனே வா
இம்புட்டும்இவ்வளவும் 
சின்னத்சுன்னத்
நபுசு மனசு
நசிபூவிதி
கொறைகுற்றம் சொல்லுதல்
நேரபமாநீடுழி 



இப்போதைக்கு  நெனப்பு வந்தது இம்புட்டுதான்   பாக்கிய பொறவு வட்சுகல்லாம் .

 இதுலே குத்தம் கொறை ஈந்தா நசிபூ கட்டளைன்னு நேனைகாமே    நபுச கட்டுபாடுதாமா வெரசா அதே வேலை செரவடி சடபுடம் இல்லாம கடுதாசி போட்டுருங்க வாப்பமரா நீங்க எல்லாம் நேரப்பமா ஈகனும்

--Shahulhameed
   Dammam

Sep 18, 2010

பேரென்ன...பிறகென்ன?

பத்துமாத
பாதுகாப்பு வளை-
கதறிக்கொண்டே கண்திறந்த...
பிறந்த தெரு என் தெருவா?

கால்களில் இறக்கை கட்டி-
கடலென்றும் காடென்றும்-
குளமென்றும் குட்டையென்றும்-
குதித்துத் திறிந்த...
வளர்ந்த தெரு என் தெருவா?

பள்ளிக் கூடப் படிப்பும்-
வகுப் பறைகளின் வசீகரமும்-
வாத்தியார்களின் வாஞ்சையும்-
என...
பயின்ற தெரு என் தெருவா?

அரும்பிய மீசையும்-
தழும்பிய ஆசையும்-
தவம் கிடந்த பார்வைகளும்-
கத்துக்குட்டி கவிதைகளும்-
என...
களித்திருந்த தெரு என் தெருவா?

பார்த்ததெல்லாம் அழகாகவும்-.
படித்ததெல்லாம் தெளிவாகவும்-
நொடி நேர பார்வைக்கும்-
கோடி அர்த்தம் கண்ட-
கல்லூரிக் காலங்கள்...
கழிந்த தெரு என் தெருவா?

வாயிக்கும் வயிற்றிற்கும்-
சார்ந்தவர்களுக்கும் சேர்ந்தவளுக்கும்
என...
பிறந்த மண் துறந்து
பொருள் தேடி...
அலையும் தெரு என் தெருவா?

வைத்த காலம் முதல்
அழைத்த பெயரை-
மாமாவிலும் மச்சானிலும்
'என்னங்க'விலும் 'இந்தாங்க'விலும் வாப்பாவிலும் அப்பாவிலும்
தொலைத்து விட்டு-
மையத்து என்ற
பெயர் மட்டும் தாங்கி
மாய்ந்து...
அடங்கும் தெரு என் தெருவா?

பொறு சகோதரா...
மஹ்சரில் சந்திப்போம்
ஒரே தெருவில்!

-sabeer

Sep 17, 2010

பினாங்கு - 'நமது வேர்கள்'

இது  எழுத  நினைத்து  வெகு  நாட்கள்  ஆகிவிட்டது.... ஒரு  முறை நண்பர்களுடன்  கதைத்தது... பிறகு.. எழுத தூண்டுகோல்  ஆனது.
பினாங்கு... சின்னவயதில்  கேள்விப்பட்ட  'சொர்க்கம்".
இன்றய திகதியில் என வீட்டு கொல்லைபுரத்துக்கு போர மாதிரி என்று சொல்லும் அளவுக்கு அடிக்கடி போகும் இடம் ஆகிவிட்டது
தரகர் தெருவும் , கடல்கரை தெருவும் கொஞ்சம் தலை தூக்க உதவிய ஊர்.[ ஆனாலும் அங்கு போய் வந்தவர்கள் செய்த அலப்பரை கொஞ்சம் ஒவர்.நம் ஆட்கள் பார்க்கும் வேலை கடுமையானது, ஆனாலும் பினாங்கு கவர்னர் ரேஞ்சுக்கு லந்து பண்ணும் தைரியம் அதிசயமானது.

ரயிலில் வந்து இறங்கியதும், ஒதும் பாத்திஹா, பின்னாடி ஒடி வரும் பசங்க ,… கொடுமை என்னவென்றல் அதில் அவர் மகனும் வருவான் அது அந்த ஆளுக்கு அது தெரியாது" இந்த சிதம்பர ரகசியத்தை வீட்டில் உட்கார்ந்து வெத்திலை, பாக்கு இடிக்கும் கிழவிதான் சொல்லவேன்டும், பிறகு 'என்னை உரிச்சு வச்சிருக்கான் , பிழிஞ்சு  வச்சீருக்கான் என்று சர்பத் கடைக்காரர் மாதிரி உளர்வார்.

பினாங்கு ஆட்கள் வந்தவுடன் கேள்விப்படும் சுடு தண்ணி, எறச்சான்ம், சேமியா எல்லாம் கால ஓட்டத்தில் நிறைய மாசுபட்டுவிட்டது.
ஆட்கள் அறிவாளி மாதிரி காண்பித்து கொன்டாளும் வீட்டு நடு முத்தத்தில் வெள்ளை வேட்டி [80 x 80] உடுத்தி குளிக்கும் அவலம் எல்லாம் இவர்களிடத்தில் நிறைய  இருக்கும்
இவர்கள் தரும் "பல்லி முட்டாய், பிஸ்கோத்துக்கு பல முறை ரெங்கு பெட்டிக்கு பக்கதில் வரும் பசங்கள் எல்லாம் இப்பொது இல்லை.
நிலைக்கதவின் ஓரத்தில் நின்று நலம் விசாரிக்கும் நம்தெரு பெண்கள். பல வருடம் ஊருக்கு வராமல் அடம் பிடிக்கும் கணவன், பிள்ளை, உடன் பிறந்தவன் என்று எல்லோரையும் நலம் விசாரிக்கும் முறை[அப்போதெல்லாம் நம் ஜனங்களிடம் வறுமை இருந்தாளும் ஒழுக்கம் இருந்தது]. . " ஆமா அவனை "பொரொயில்"['PRAI" is name of the place in Main Land. Remember PENANG is an island] பார்த்தென், அக்கரைக்கு போயிட்டான்ல என்று சொல்வது, சில அறிவுரைகளையும் [கருத்து கந்தசாமி ஸ்டைலில்  நமது ஆட்கள் சொல்வதும் இப்போது வந்த மொபைல் ஒழித்துவிட்டது


காது ஒரத்தில் பஞ்சு, கொஞ்சம் பச்சை கலர் சென்ட். காலரில் மடித்த கர்சீப், ஸ்டிச்கர் கிழிக்காத சட்டை, கையில் பட்டன் குடை என்று [கொஞ்சம் சின்ன வயது ஆட்கள்  என்றால் Rayban கண்ணாடி, கலர் செருப்பு வந்த புதிதில் இவர்களின் "பில்டப்பு"க்கு மயங்காதவர்கள் இல்லை.

கஸ்டம்ஸ் விதி முறைகளின் மாற்றம், மற்றும் இப்போது வந்த கார்கோ சர்வீசஸ்... “நாகப்பட்டினதில் ஜப்தி பண்ணிட்டான், “டூட்டி கடுமை போன்ற வார்த்தைகள் மறைய காரணமாகி விட்டது.

"என்ன ஈந்தியா?" [ இந்தியா தான் இவர்கள் வாயில் இப்படி ஆனது]
"பினாங்கிலெ ரோட்டிலெ சோரே போட்டு திங்கலாம்" போன்  அல்ட்டாப்புகள் எல்லாம் நான் இங்கு வந்த பிறகு அவர்கள் சொன்ன இடங்களை பார்த்து சிரிப்புதான் வந்தது.
கறி வாங்கும் ஓமலில் மீன் வெளியில்  தெரிய நடப்பதும், இறைச்சி கடையில் தான் ஒரு திறமையான ஆள் மாதிரி பேரம்  பேசுவதும்[இறைச்சிகாடைகாரர்களிடம் யாரும் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை]
நாளடைவில் கொண்டு வந்த காசு எல்லாம் கந்தூரியிலும், தர்கா நேத்திகடனிளும், ஸ்விட்ச் போட்ட மாதிரி அழும் சொந்தங்களின் கண்ணீருக்காகவும்,சுன்னத்து, காது குத்து தேவைகளில் கரைய 'பொடி மீன் பிடித்து போவதும்...ஒமல் இரட்டையாக மடிப்பதும்....யாரும் நலம் விசாரிக்காமல் நடப்பதும் ...உலகம் இப்படித்தான் என்று எனக்கு அப்போ தே  காண்பித்தது

கப்பல் கல்லுக்கு[ship ticket] மனைவியின் நகை, வலையல் எல்லாம் அடமானம் போவதும் இன்றைக்கு நினைத்து பார்த்தாலும் "என் இனமே இப்படி அடிப்படை தேவைக்காக மொத்தமாக அவதிப்பட்டதே என்று, இன்றும் என் மனம் வலிக்கும்'
வாழ்க்கையில் நாம் எவ்வளவு சாதித்தாலும், அந்த "வேர்களின்" பங்களிப்பு நிறைய இருக்கிறது.
Zakir Hussain
Note: This was my first article in internet about 3 years ago.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More