Welcome to our website. Neque porro quisquam est qui dolorem ipsum dolor.

Lorem ipsum eu usu assum liberavisse, ut munere praesent complectitur mea. Sit an option maiorum principes. Ne per probo magna idque, est veniam exerci appareat no. Sit at amet propriae intellegebat, natum iusto forensibus duo ut. Pro hinc aperiri fabulas ut, probo tractatos euripidis an vis, ignota oblique.

Ad ius munere soluta deterruisset, quot veri id vim, te vel bonorum ornatus persequeris. Maecenas ornare tortor. Donec sed tellus eget sapien fringilla nonummy. Mauris a ante. Suspendisse quam sem, consequat at, commodo vitae, feugiat in, nunc. Morbi imperdiet augue quis tellus.




Showing posts with label அபுஇபுறாஹிம். Show all posts
Showing posts with label அபுஇபுறாஹிம். Show all posts

Dec 4, 2010

மெட்ரோ ரயில் பயணங்களிலே...

நாங்கள் கடல் கடந்து திரவியம் தேடவந்தவர்கள் இங்கே எங்களுக்குத் தடம் கொடுத்தவர்கள் ஒர் ஐக்கிய(மான) அரபு(நாடுகளின்) அமீர(கங்கள்) கண்டெடுத்த நாள் தேசிய ஒருங்கினைப்பு தினம் (national day) இன்று அதுதான் எங்களுக்கும் விடுமுறை நாள்.

விடுமுறை என்றால் உறக்கமே பிரதானமாக இருந்திடும் இங்கிருப்பவர்களின் வாழ்வியலின் பகுதியாக. சரி என்னத்த தூங்கி கண்டுவிடப் போறோம்னு காலை 09:17 மணிக்கு உறைவிடம் விட்டு வெளிக்காற்று வாங்கலாமே என்று பொடி நடை பயில ஆரம்பித்தேன் தலையைக் கவிழ்த்தவனாக. சட்டென்று ஒலித்த வாகனத்தின் சக்கரச் சிக்கலின் சத்தம் கேட்ட திசை நோக்கி பார்த்தால் மஞ்சள் வண்ணம் பூசிய டெயோட்டோ வாடகை கார் (சூரியக் குடும்பத்திற்கு சொந்தமானதல்ல) மந்தையிலிருந்து பிரிந்து வந்த ஆடுபோல் என்னை வெறித்துப் பார்ப்பதுபோல் தோன்றியதால் என் பார்வையை மாற்றி சற்று நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.

நேர் கொண்ட நடைன்னு சொல்லிட்டு கவிழ்ந்து நடந்தா எப்படின்னு யோசனையிலேயே தனியா சாலையோர முனையில் நின்ற பலகையை கண்டதும் அதில் "Dubai Metro" - 200mன்னு போட்டிருந்தது சரி என்னதான் இருக்குன்னு 200 மீட்டர் தூரத்திற்கு நடந்து பார்த்தேன். அட! கீழ்நோக்கி மாடிப் படிகள் மடித்து மடித்து சென்று கொண்டிருப்பதைக் கண்டதும் இன்றைக்கு மெட்ரோ இரயிலில் போயித்தான் பார்ப்போமே என்று உள்ளே சென்றேன். ஆராவராமில்லாத அமைதியாக '1985'களில் அதிரைப்பட்டினம் - பட்டுக்கோட்டை சாலையில் தெரியும் ஆள் நடமாட்டம் போல் அங்கே மூன்று பேர்தான் அந்த மடிப்போடு கீழ் இருக்கும் படிக் கட்டில் நின்றார்கள்.

ஏற்கனவே பயணத்திற்கான நுழைவு அட்டை என்னிடம் இருந்ததால் இலகுவாக உள்ளே சென்றேன், அங்கேயும் மீண்டும் மடித்து மேல் நோக்கிச் செல்லும் படிக்கட்டிலே இரயில் வந்து நிற்கும் இடம் சென்றடைந்தேன் அப்போது காலை 09:28 அங்கே குடையிடனோ அல்லது மஞ்சள் பையுடனோ யாரையும் காண முடியவில்லை. பள்ளிக் கூடத்திலிருந்து ஓடிவந்த சிறுவனைப் போல் ஃபிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த இருவர் அரைக்கால் டிரவ்சர் அனிந்து அமைதியா வந்து நின்றார்கள் அதன் பின்னர் சிறுகச் சிறுக பன்னாட்டு முகங்களின் கலவையை அங்கே காண முடிந்தது. சரியாக நான்கு நிமிடம் கழித்து மெட்ரோ இரயில் வந்தது எல்லோருடன் சேர்ந்தே நானும் ஏறிக் கொண்டு தேடினேன், இருக்கை கிடைத்த இடத்தில் அமர்ந்தேன்.

உட்கார்ந்து கல்களை மடக்கி எடுப்பதற்குள் யாரோ சண்டைக்கு நிற்பதுபோல் கொய்யோ முய்யோன்னு சத்தம் வருவதைக் கண்டு திரும்பினால் இரண்டு ஃபிலிப்பைன் நாட்டுக் காரர்கள் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் சாதாரனமாக பேசினாலே சத்தமாகத்தான் பேசுவார்கள் அல்லது அரைக் கரண்டில் ஓடும் டேப்ரிக்கார்டர் மாதிரி இழுத்து இழுத்தும் பேசுவார்கள்.

அடுத்த நிறுத்தம் "யூனியன் ஸ்கொயர்" அங்கே ஏராளமான கூட்டம் ஏறியது, ஏறியவர்கள் கிடைக்கும் இடத்தில் தங்களைப் பொறுத்திக் கொண்டார்கள் சட்டென்று "பின்னே அவட எந்தானு போயி" இப்படி சடேரென்று ஒரு குரலை எழுப்பிக் கொண்டிருந்தவர் பக்கத்தில் இருப்பவர்கள் காது கிழியுமே என்றுகூட விளங்காமல் நாட்டிலிருக்கும் தாரத்திற்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் மொழி தெரிந்தவர்களும் தெரியாதவர்கள் அந்நபரைப் பார்ப்பதும் பார்வையை திருப்புவதுமாக இருந்தனர்.

"காலித் பின் வாலித்" நிறுத்தம் இறங்கியவர்களைத் தொடர்ந்து ஏறியவர்கள் குறைவுதான், அதில் இருவர் பேசிக் கொண்டே உள்ளே வந்தார்கள் "you should not allow them" மற்றவர் "I can't do further" இப்படியாக அவர்களின் பிரச்சினையை பேசி கொண்டிருந்த ஒருவருக்கு அலைபேசி ஒலித்தது அதனை எடுத்து அவரது மொழியில் பேசினார் என்ன பேசினார்னு தெரியலை, என்னோட யூகம் அது இந்திய மொழிகளில் ஒன்று அதுவும் வடநாட்டைச் சேர்ந்ததுன்னு விளங்கிக் கொண்டேன்.

அடுத்த நிறுத்தம் "அல்-கராமா" இங்கேதாங்க நம்ம மின்சார இரயிலில் ஏறுமே கூட்டம் அந்த மாதிரி திபு திபுன்னு ஏறினாய்ங்க, ஆஹா.. சய்த்தம்ம் "கொய்யோ முய்யோ", "கைகளியே", "கியாகர்னக்கல்யே", "கோமஸ்தகா", " எத்தியா" அதனூடே "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற முகமுன்னும், இப்படியாக காதில் விழுந்த மொழிகளின் சிலது தெரிந்திருந்தாலும் மற்றவைகள் எனக்குத் தெரியவில்லையே, இங்கே உங்களுக்கு சொலித்தர ஆனா ஆராவரம் தொடர்ந்து கொண்டிருந்தது.

நிறுத்தம் "அல்-ஜாஃப்லியா" யாருமே ஏறவில்லை இறங்கவும் இல்லை என் கண்ணுக்கு பட்டவகையில்.

அடுத்தடுத்து வந்த நிறுத்தங்களில் "துபாய் டிரேட் செண்டர்" மற்றும் "ஃபினான்ஸியல் செண்டர்" ஓரிருவர் ஏறி இறங்கினர் ஆனா தொடரும் மொழிச் சத்தங்கள் அப்படியே அதில் ஏற்றம் இறக்கம் இருந்து கொண்டேயிருக்கிறது.

அடுத்த நிறுத்தம் "புர்ஜ் கலிஃபா" இங்கே கொஞ்சம் கொய்யோ முய்யோ கூட்டமும் மற்றவர்களும் இறங்கினார்கள் சற்று மொழிகளின் ஓசைச் சண்டைகள் குறைவானது போல் உணர்வு ஏற்பட்டது.

அதற்கு அடுத்தடுத்து வந்த நிறுத்தங்களிலும் "பிஸினஸ் பே", "இஸ்லாமிக் பேங்க்", "ஃபர்ஸ்ட் கல்ஃப் பேங்க்" ஏற்றமும் இறக்கமும் இருந்தது ஆனால் சற்று மொழிகள் வதைகள் குறைந்திருந்தது என்னவோ மெய்யே.

நிறுத்தம் "தி மால் ஆஃப் எமிரேட்ஸ்" அப்படியே பாதி இரயில் காலியான மாதிரி தோன்றிய சில விணாடிகளில் அதற்கும் சற்று குறைவாக மற்றொரு கூட்டம் ஏறியது இதில் நிறைய ஐரோப்பிய வெளிநாட்டினர்தான் அதிகம். நாம மட்டும் என்னவான்னு கேட்டுடக் கூடாது அதுக்காக எங்களை இங்கே மண்ணின் மைந்தர்கள் என்றும் நினைத்துட வேண்டாம். மொழிக் கூச்சல் குறைவாக இருந்தாலும் பாதி புரிகிறது மீதி புரியாமல் இருந்தது அவர்களுக்கு அப்படித்தான் போலும்னு சும்மாவே இருந்திட்டேன்.

இப்படி அமைதியாக இருந்திக்கும் போதுதான் வேறு பெட்டியில் ஏறியவர்கள் இடம் தேடி அலைந்த பெண்களும் ஆண்களும் வட நாட்டினர் (அங்கே அரசியில் நடத்துறவங்களா இருக்கலாம்) சுற்றுலாவுக்கு வந்தவர்கள் போலிருந்தனர். என்ன விஷயம்னா அவர்கள் ஒவ்வொரு வரையும் நாம்தான் சுற்றி சுற்றிப் பார்க்கனும் அவ்வளவு உருண்டையாக இருந்தார்கள் இந்த உடல்வாகோடு சுற்றிப் பார்க்க வந்திருக்கிறார்கள் வந்தவர்கள் அப்படியே அந்த இடத்திலேயே நின்று விட்டார்கள், சற்று அமைதி காத்த இடம் மீண்டும் இந்திய இரயில் பயணங்களை நினைவுக்கு கொண்டு வந்தார்கள். திராவிடக் கட்சிக்காரர் இருந்திருந்தால் நிச்சயம் தார்பூசியிருப்பார் இங்கே இந்தி ஒழிக என்று அதோடு நோட்டீஸும் ஒட்டியிருப்பர் இந்த மெட்ரோவில் !

வட நாட்டு மொழி வதை(ச்சத்தம்) குறந்தபாடில்லை அதற்கு அடுத்தடுது வந்த நிறுத்தங்கள் சிலரின் ஏற்றம் இறக்கம் இருந்தாலும் அவர்கள் அமைதியாக எதோ தொலைத்தவர்கள் போல்தான் வந்தார்கள் சென்றார்கள்.

இறுதியாக இறங்க வேண்டிய இடம் "இப்னு பத்துத்தா மால்" நிறுத்தம் வந்து இரயில் நின்றதும் புயல் அடித்து ஓய்ந்த அமைதியானது இரயில் ஆனல் குளிர்சாதங்களின் இரைச்சல் மட்டும் தூறலின் இனிய சத்தத்தை ஞாபகப்படுத்தியது.

இந்த 50 நிமிடப் மெட்ரோ பயணத்தில் தமிழ் பேசுபவரோ என்று எண்ணத் தோன்றிய முகங்களை காண முடிந்ததே தவிர ஆனால் ஒரு வார்த்தை தமிழில் என் காதுகளில் விழவில்லை ஆச்சர்யமாக இருந்தது, ஒருவேளை எனக்கு தமிழ் தெரியும்னு தெரிந்துதான் அமைதியாக இருந்தா(ய்)ங்களோ என்னவோ.. வேற என்னவென்று தெரியலைங்க !.

இந்த மெட்ரோ இரயில் பயணங்கள் பற்றி எழுத நிறைய இருக்குங்க என்ன ஒரு சிக்கல்னா அத எல்லாத்தையும் தமிழிலதான் வாசிக்க வேண்டும் அதுதான் நம் நிலமை J.

ஒரேயொரு விஷயம் கேட்கனும்னு தோனுச்சு அதைக் கேட்டு விடுகிறேனே : அதெப்படிங்க இந்த ஏழு குட்டி குட்டி நாடுகளே (ஐக்கிய அரபு அமீரகம்) எவ்ளோ ஒத்துமையாக இருக்காங்க ஒன்னாவே எல்லாமே செய்றாங்க, ஒரே பெருநாள் கொண்டாடுறாங்க ஆனா நாம நாலு தெருப் பெயராலே பிரித்து பிரித்து வைத்து இருக்கோம் ? ஏனுங்க எப்போதான் ஒன்னா சேர்ந்தே எல்லாமே செய்யப் போறோம். சரி சரி நாங்க ஒன்னாதானே இருக்கோம்னு என்னோட காதை திருவ வேண்டாம், கொஞ்சம் முன்னாடி வாங்க அத கைகோர்த்து முன்னிருத்தி காட்டுவோமே!

-- அபுஇபுறாஹிம்

Nov 30, 2010

இணையத்தில் வலை வீச்சு...

Version - 3

இணையத்தில் காண்பது (சமூக) பிணைப்பா அல்து தனிமனித சுதந்திரமா ? இவைகளையும் இங்கே பார்த்து வருகிறோம். இணையத்திலிருக்கும் சாதக பாதக நிகழ்வுகளை முடிந்த வரை என் தேடலுக்குள் எட்டியதையும் சிக்கியதையும் கோர்வையாக்கி உங்களின் சிந்தனைக்காக வைத்திருக்கிறேன்.

இன்றையச் சூழலில் மிகப் பிரபலமாக இருந்துவரும் எத்தனையோ சமூக பிணைப்பு வலைத் தளங்களில் முதன்மையாகவும் அதோடு நாம் யாவருக்குமே நன்கு அறிந்த "சமூக பிணைப்பு" வலைத் தளமான "facebook.com" தோற்றமும் அதன் அசு வளர்ச்சியும் வியக்க மட்டும் வைக்கவில்லை அதன் விபரீதம் எந்த அளவுக்கு பரந்து விரிந்து கடை போட்டிருக்கிறது என்பதும் அதிர்ச்சியை கொடுக்கிறது.

"ஃபேஸ்புக்" 2004ம் வருடம் ஜனவரி இரண்டாவது வாரத்தின் இறுதியில் "ஹார்வர்ட் பல்கலைகழக" மாணர்வகள் விடுதி அறையில் தனியாக இருந்த "மார்க் ஜுக்பெர்க்" தனது தொலைந்த நட்புகளை எப்படி மீட்டெடுப்பது என்று மல்லாக்க படுத்து யோசித்தன் வினையே பின்னர் தனது மற்ற மூன்று நண்பர்களுடன் சேர்ந்து 2004 ஃபிப்ரவரி மாதம் உருவாக்கிய வலைத் தளம்தான் அந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமே என்று உலவவிட்டனர், பின்னர் பாஸ்டன் இன்னும் பிற கல்லூரி மாணவர்களையும் வலைக்குள் சிக்க விட்டனர் அதோடில்லாமல் பள்ளிகளிலும் இதன் ஊடுருவல் எத்தியது.

பள்ளிக்கூட எல்லையைத் தொட்டவுடன்தான் ஒரு கட்டுப்பாடு வைக்கப்பட்டது அதில் 13 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் இதில் இணையலாம் என்று ஆனால் அங்கிருக்கும் வரை அவர்கள் வயதைச் சரியாகத்தான் சொல்லி வந்தனர் பின்னர் இதனை வெளியுலகிற்கு திறந்து விட்டதும் எத்தனை பேர் உண்மையான வயதைச் சொல்லியிருப்பார்கள் ? இன்று 500 மில்லியனுக்கு மேல் பயன்பாட்டார்களைக் கொண்டிருக்கிறது இந்த வலைத் தளம் இதுவே தடம் மாறுபவர்களின் மனதையும் கொன்று குவித்து வருவதையும் மறுக்க முடியாது.

ஆரம்பித்தவர்கள் நோக்கம் என்னவோ தொலைத்த நண்பர்களை வலைக்குள் சிக்கவைக்கத்தான், ஆனால் இதனை நாளடைவில் நட்பு என்பதன் அற்புதமான மகிமையை கொச்சைப் படுத்தவும், காமம் கலக்கவும், களவு கற்பிக்கவும், நம்பிக்கை துரோகம் செய்யவும், குழப்பம் உண்டாக்கவும், கணவன் மனைவி உறவுக்குள் ஊடுருவவும், பழிவாங்கிடவும் ஒரு சாரார் பயண்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதில் மிகச் சிலரே நல்ல முறையில் இந்த தளத்தை ஆக்கப் பணிகளுக்கும் அவர்களின் நலன் தேடும் நேசங்களை ஒன்றினைக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

இதன் பயன்பாடுகள் பற்றி சொல்வதனால் நீண்டு கொண்டே செல்லும், ஆகவே கேள்விகளாக உங்களிடையே ஏதும் உதித்தால் பின்னுட்டங்களாக அனுப்பித் தாருங்கள் அதற்கான பதிலோடு இன்னும் விரிவாக பார்க்கலாம். சரி, இவர்கள் எப்படி இந்த சேவையை இலவசமாகத் தருகிறார்கள? இவர்களின் வெற்றி எங்கே ஆரம்பித்தது?

முதலில் இவர்கள் வைத்த குறி தடுமாறும் இளமையை இலகுவாக வலைத்துப் போட்டு மிகப் பெரிய வலை வட்டம் உருவாக்கினார்கள் அங்கே அவர்கள் கண்டது இளைஞர்களின் அதீத உலக ஆசைகளும், ஆண் பெண் மோகம் இவைகள்தான். இதனையே முலதனமாக வைத்தார்கள் தங்களின் பொழப்புக்கும் இந்த வலைத் தளத்தை இலவசமாக நடத்துவதற்கும், பெரிய பெரிய நிறுவனங்களிடமிருந்து விளம்பரங்களைப் பெறுவதற்கு சேமித்து வைத்திருக்கும் அங்கே பெற்ற அரிய தகவல்களை பரிமாறிக் கொள்ளச் செய்தார்கள்.

இதன் பயன்பாட்டாளர்கள் ஏற்கனவே பதிந்து வைத்திருந்த தகவல்களை அவர்களுக்குத் தெரியாமலே இவ்வகை வலைத் தளங்களை நடத்துபவர்களின் தகவல் பெட்டகத்திலிருந்து அதாவது சுயவிபரங்களின் குறிப்புகளிலிருந்து அவர்களின் ஆண்/பெண் பால், விருப்பு, வெறுப்பு, இடம், மோகம், செலவீனங்கள், குடியிருப்பு, உறவுகள், எவ்வகையில் தேவைகள் நிறைவு செய்வார்கள் இன்னும் நிறைய விபரங்களை எடுத்து அவரவர் நாட்டிற்கு தகுந்த மாதிரி, மாநிலத்திற்கு தகுந்த மாதிரி நேர்படுத்தி ஆங்காங்கே இருக்கும் நிறுவனங்களுக்குக்கு சந்தைபடுத்தும் ஆய்வு (market study) என்ற பெயரில் கொடுத்து அவர்களின் விளம்பரங்களை பெருவதற்கு பயன்படுத்துகிறர்கள்.

அவ்வாறு பெறப்படும் விளம்பரங்களை பயன்பாட்டாளர்களின் விருப்பு வெறுப்புக்குத் தகுந்தார்போல் அவர்கள் ஃபேஸ்புக் வலைத் தளத்திற்கு வருகை தரும் நேரங்களில் தானாக இவ்வகை விளம்பரங்கள் கண்ணுக்குள் சிக்க வைக்கின்றனர் இதில் சிலர் “அட இதென்ன புதுசா இருக்கேன்னு” அந்தச் சுட்டியை தட்டி விட்டால் வலைத் தளம் நடத்துபவர்களின் கல்லா கட்டும் சொட்டு நீர் பாசனம் போல் அங்கே ஒரு சொட்டு இங்கே ஒரு சொட்டு என்று சிறு துளிகள் அப்படியே பெரும் வெள்ளப் பெருக்கெடுத்து நிறையும் அவர்களது கஜானா. இதுமட்டுல்ல ஆன்லைன் கேம்ஸ் இதில் இவர்கள் அடிக்குக்கும் கொள்ளைக்கும் எல்லையில்லை.

உதாரணத்திற்கு வளைகுடாவில் இருக்கும் ஏதாவது ஒரு நாட்டில் உங்களின் நுழைவு மின் அஞ்சல் முகவரியையும் கடவுச் சொல்லையும் இட்டு இந்த வலைத்தளத்திற்குள் சென்றால் இங்கே இருக்கும் நிறுவனங்களின் விளம்பரங்கள் உங்கள் கண்ணில் படும் அவைகள் உங்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றார் போலிருக்கும், அப்படியே ஊருக்குச் சென்றதும் நடுவிக் காட்டுக்கு போயி அங்கே தோப்பில உட்கார்ந்துகிட்டு ஃபேஸ்புக்கை திறந்து மேய்ச்சலில் ஈடுபட்டால் கண்ணுக்குள் சிக்கும் இந்திய நிறுவனங்களின் விளம்பரங்கள், என்ன ஒரு வித்தியாசம் இங்கே எந்த வகை பொருளின் விளம்பரமோ அதுவே அங்கே இந்திய கம்பெனியாக வரும் ஏன் ஒருவேலை உங்களின் ரசனைக்கு தகுந்தார் போல் "தரமான உரம்" என்ற விளம்பரமும் கூட வரலாம்.

மிகப் பெரிய இரண்டு நிறுவனங்களில் இங்கே இவர்களின் செயல்பாடுகளில் நாம் கண்ட அனுபவம். இவர்கள் எப்படி அனுகுகிறார்கள் என்றால், அவர்களின் முன்னுரையே இப்படித்தான் இருக்கும் "உங்கள் பொருட்களை சந்தைப் படுத்த சரியான வழி என்றும், உங்களின் பொருட்களின் மோகம் அதிகம் எந்த எந்த இடங்களில் இருக்கிறது என்று பட்டியலிடுவதும் அதனை அப்படியே அச்சு எடுத்துவந்து பூச்சாண்டி காட்டுவதும் அதில் முதல் ஒரு இலட்சம் அடி(க்கு) hit இலவசம் அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு அடிக்கும் (hit) இவ்வளவு வரும் என்றுதான் வருவார்கள், முதல் மாதம் நன்றாக இருப்பதாக உணர்வோம், அடுத்தடுத்த மாதம் அவர்கள் கேட்டுவரும் தொகைகயைக் கண்டால் தலையைச் சுற்ற ஆரம்பிக்கும், மூன்றே மாதத்தில் அந்த இரண்டு நிறுவனங்களும் இந்த விளையாட்டுக்கு நாங்க வரலைன்னு பின் வாங்கிக் கொண்டன.

ஒவ்வொரு அடிக்கும் காசு கொட்டுவது "வீட்டு மணைகளில் மட்டுமல்ல" இந்த இணையக் கடலில் வலைகட்டி உல்லாசம் தேடும் இவ்வலைத் தொட்டிலிலும் ஒவ்வொரு அடிக்கும் (click) காசு இதுதான் இவர்களின் வயத்துப் பொழப்பு ???

இந்தப் பாவப்பட்ட "முகப்புத்தகம்" (facebook.com) தனது கிளை தலைமை அலுவலங்களை அமெரிக்கா, ஐயர்லாந்து, சவுத்கொரியா, நியூஸ்லாந்து மற்றும் இந்தியா (ஹைதராபாத்) வைத்திருக்கிறது. சென்ற வருடம் வரை இதன் வருமானம் 800 மில்லியன் டாலர்கள். மொத்தம் 1789 க்கு மேல் வேலையாட்கள் இருக்கிறார்கள்.

எந்தவிதமான ஆக்கபூர்வமான பனிகளுமில்லாமல் வெறுமனே பொழுது போக்குக்காக பயன்படுத்திவருகிறோம்னு நாம் சொல்லிக் கொண்டாலும் இதன் பாதகங்களை உணர்ந்திருக்கிறோமா ? அதனால் பாதிக்கப் பட்டிருக்கிறோமா ? நமது நேசங்களில் எத்தனை பேர்கள் இதனை சிக்கலாக பார்க்கிறார்கள் ? எத்தனை பேர் சிறப்பாக வலைய வருகிறார்கள் ? இதனால் கண்ட பலன்கள்தான் என்ன ?
?!

|-|-|-|-|-|- என்ன |-|-| இங்கே |-|-| மணை |-|-| போட்டிருக்கான்னு |-|-| கேட்டுடாதீங்க !-|-|-|-|-|-|


சொடுக்கு : நினைவலைகள் சும்மா இருக்காமல் "பட்டா இல்லாத (தனி)குடில்கள் என்று ஒரு சிறிய ஆக்கம் ஒன்றினை ஏனோ திடீரென்று ஞாபகத்திற்குள் வரவைத்து யோசிக்க வைக்கிறது இன்னும், அதன் சாரமும் இங்கே:-

தனிக் குடில் blog எனப்படும் வலைப்பூக்கள். இவைகளின் ஆதிக்கத்தினால் வேண்டியவர்கள் தனக்கென தனி வீடு கட்டிக் கொண்டு அங்கே நடத்தும் கொட்டங்கள் ஏராளம், என் வீடுதானே நான் எதனையும் செய்வேன் எப்படி வேனும்னாலும் இருப்பேன், இதுதான் என் வாதமென்று தன்னிச்சையாக செயல் படுபவர்களையும் காண்கிறோம்,.

கிடைத்திருக்கிற இடத்தில் இலவசமாக வீடுகட்டி நல்லது செய்பவர்களும் ஏராளம். அதுமட்டுமா இப்படி கட்டிக் கொண்ட தனிக் குடிலில் தனிமனித துவேஷம், சங்கங்கள், கட்சிகள், இயக்கங்கள் வாடகை கொடுக்காமல் தன்னிச்சையாவோ அல்லது பொது நலனோடும் குடில் கொண்டு வருகிறார்கள்.

சிலர் கதவைப் பூட்டிக் கொண்டு அடிக்கும் கொட்டம், மற்றும் சிலர் கதவை திறந்து போட்டுக் கொண்டு அடிக்கும் கொட்டம், வேறு சிலரோ பினாமியாக (முகமூடியுடன்) இலவசமாக கிடைத்திருக்கிறதே என்று படுத்தும் பாடு அதிகம் அதிகம் அதிகம்.

இந்த இலவச குடில் கட்டி போஸ்டர் ஓட்டுபவர்களோ முழு நேரப் பத்திரிக்கைக்கு நிகராக செயல்படுவதாக சொல்லிக் கொண்டும் அதோடு தங்களின் முகம் மூடிக் கொண்டு ஆனால் ஊருக்கு வெளிச்சம் காட்டுவதாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

சரி, இந்த இலவச (மணைப்) பட்டா இல்லாத குடில்களுக்கு இடம் கொடுத்தவர் திடீரென்று பிடுங்கிக் கொண்டால் என்ன செய்வார்கள் இவர்கள் ?

சரி நாம மல்லாக்க படுத்து யோசிப்போமா

- அபுஇபுறாஹிம்

Nov 23, 2010

இணையத்தில் வலைவீச்சு...

Version : 2.1.0
தனித் தூதுகள் – messengers
சமூக பினைப்பு வலைத் தளங்களின் (social networking) ஆதிக்கம் அதன் உள்நோக்கு ஆக்கப் பனிகளை காட்டிலும் சீரழிவுப் புதை குழிகளை வெட்டி வைத்து வீழ்த்துவதில் முன்னனியில் இருப்பதை யாவரும் அறிந்ததே இதனை
மேலும் இனி வரும் பதிவுகளில் விரிவாக நிச்சயம் நாம் தெரிந்து கொள்ளத்தான் இருக்கிறோம், இதற்கு முன்னர் வெளிவந்த இரண்டு தொடர்களை வாசித்த சில நண்பர்கள் தனி மின்மடல் மூலமாக அவர்களுக்குரிய சந்தேகங்களை வாதமாக வைத்தார்கள், அவர்களுக்கு மறுமொழி அளிக்கும்போதே விளக்கம் கொடுத்திருந்தேன் அவைகளின் சுருக்கச் சாரம் இங்கே பதியலாமே என்று தோன்றியதால் பதிகிறேன்.

நம் மக்கள் கணினியின் உதவியுடன் உலவியில் வலை மேய்ச்சலுக்கு ஈடாக அதிகம் பன்படுத்தும் மற்றொரு இணைய பயன்பாடுதான் "தனித்தூது" (messenger) மென்பொருள்கள் (software) இவைகளை மிகப் பிரபலமான நிறுவனங்களும், வேறு பல வலைத்தளங்களை நிர்வகிக்கும் நிறுவனங்களும் இலவசமாக வழங்கி வருகின்றன. சரி இந்த "தனித்தூது" (messager) எப்படி உருவானது? இன்று இதன் உச்சம் எந்நிலையில் உள்ளது ! என்று துருவ ஆரம்பித்தால் பதிவின் நீளம் நீண்டு கொண்டேயிருக்கும். இதனை சுருக்கமாக இரண்டு வரிகளில் சொல்வதனால் இரு கணினிக்கிடையில் தகவல் பரிமாறிக் கொள்ள பயன்படுத்தப்பட்ட மிகச் சாதாரன மென்பொருளின் வளர்ச்சிதான் இன்று பலகோடி கணினிகள் உதவியுடன் ஒரே நேரத்தில் கணக்கிடங்கலாத கணினி பயன்பாட்டளர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது.

இன்றைய சூழலில் எத்தனையோ வகையான தொலைவு அனுகுமுறை (remote access) அதாவது நமக்கு அருகிலிருக்கும் அல்லது தூரத்திலிருக்கும் கணினியை நாம் இருக்கும் இடத்திலிருந்து கொண்டே இயக்குவதற்கு நல் நோக்கத்தில் இலவசமாக உலவ விட்ட மென்பொருள்கள் (remote access softwares) கலப்போக்கில் வேவு பார்க்கவும், நிறுவப்பட்டிருக்கும் (installed) கணினியையே வேட்டு வைக்கவும் பயன்படுத்தப் பட்டு வருவது விஞ்ஞான வளர்ச்சி சீர்கேட்டுக்கு வாய்கால் வெட்டி வரப்பு உயர்த்தி வைத்திருப்பது என்னவோ உண்மை.

எனக்கு வந்த தனிமடலில் அதெப்படி அடுத்தவங்க கணினியில் உள்ளே செல்ல முடியும் என்று கேட்டதோடில்லாமல் வாதம் செய்வதுபோல் சில கேள்விகளையும் அடுக்கியிருந்தார் எனது நண்பன் அதோடு சற்று அந்த விசயத்தை சில நாட்களே ஆறப்போட்டேன், அப்படி என்னதான் கேட்டுபுட்டானாம் முனுமுனுக்க வேண்டாம்.

நான் அவனிடம் வழக்கமாக மிகப் பிரபலமான நம் எல்லோருக்கும் தெரிந்த சுடான மின்அஞ்சல் "தனித்தூது" மூலம் தட்டச்சு செய்தும் (typing) வாயாடி சாட்டிங்கில் (voice chatting) ஈடுபட்டிருந்தேன் அவரது கணினியில் இருந்த சிக்கல்கள் பற்றி சில சந்தேகங்கள் கேட்டார் நான் எவ்வளவு சொல்லியும் அவருக்கு சரியாக பிடிபடவில்லை வெறுப்பில் திட்ட ஆரம்பித்து விட்டார் அவரிடம் சமாதானம் செய்து விட்டு நான் சொல்வதை செய்டான்னு சொல்லி ஒவ்வொன்றாக செய்தார்மைவைத்து மயக்கியவர்” போல் ஏன்னா அவருக்கு அந்தச் சிக்கல் சரியாக வேண்டுமே அப்படியொரு நெருக்கடி.

சற்று நேரத்தில் DTH அதிர்வதுபோல் சத்தமாக கத்த ஆரம்பித்து விட்டார் வாயாடியிலும் (voice chatting) பேசி கொண்டுதான் இருந்தேன் அவரோடு, அதாவது தானாக கணினி இயங்க ஆரம்பிக்குது எல்லாமே மறஞ்சுடுச்சுன்னு மறுபடியும் சரியா வந்திடுச்சு ஆனா மவ்சு தானாக அசையுது, எழுத்துக்கள் வருகிறதேன்னு.

நானும் அவர் சொல்லியிருந்த சிக்கலை சரி செய்வதாக சொன்னேன் சிறிது நேரத்தில் அவரது கணினியின் உள்ளே சென்று அகம் கண்ட பலனாக myPicture folderல் (என்னுடைய படங்கள் கோப்பு) யார் யார் படங்கள் இருக்கிறது என்று நான் பாட்டியலிட்டதும் அதிர்ந்து விட்டார் இதேபோல் இன்னும் சில அதிர்ச்சிகள் கொடுத்து அதிரவிட்டேன் எல்லாவற்றையும் இங்கே விளக்க முடியவில்லை.

இது ஒரு சாம்பிள்தான் இதைவிட கண்ணைக் குத்திவிட்டு ஒன்றுமே தெரியாமல் எவ்வளவோ வலைக்குள் ஊடுருவி செய்வினையோ வஞ்சனையோ அல்லது எதனையும் புதைத்து வைத்து பின்னர் கதவு தட்டிச் சென்று கணினியானந்தாவையோ, கூகிலாண்டவரையோ, சூடுமெயிலாண்டவரையோ யாஹுவாண்டவரையோ துணைக்கு இழுத்து வைத்துக் கொண்டு கணினிப் பினிபோக்கிட வைக்க முடியும், வதைத்து எடுக்கவும் முடியும் என்று சொல்லத்தான் இதனை மேலோட்டமாகத் தான் சொல்லியிருக்கேன்.

தொலைவு தொடர்புகள் (remote access) ஏற்படுத்த இலவசமாக நிறைய மின்பொருள்கள் கொட்டிக் கிடக்கிறது, இதனைக் கொண்டு விபரம் தெரிந்தவர்களின் கண்ணையே கட்டிவிட்டு கண்ணாமூச்சி விளையாட முடியும் ஆனால் நுனுக்கமான கணினி அறிவு இல்லாமல் நம் வீடுகளில் இயக்கப்படும் கணினிகளின் நிலையை யோசித்துப் பாருங்கள்.
  • இலகுவாக யாரையும் நண்பர்கள் பட்டியலில் சேர்த்து விடாதீர்கள்.
  • புதியப் பழக்கம் கிடைத்து சாட்டிங்கில் இருக்கும்போது அதனை மட்டும் செய்யுங்கள்.
  • முடிந்தவரை நெருங்கியவர்களுடன் மட்டுமே சாட்டிங்கில் ஈடுபடுங்கள்.
  • வீட்டுக் கணினியை எப்போது கண்கானியுங்கள் ஆனால் வேவு பார்ப்பதாக மாட்டிக் கொள்ளாமல் உங்களின் கவனத்தை தெரியப் படுத்திடுங்கள்.
  • பிள்ளைகளின் தனித்தூது ஐடியை தெரிந்து வைத்திருங்கள்
  • அவர்களிடம் நண்பர்களின் தொடர்பு பட்டியலை கணினியில் உங்களுக்கு காட்டிவிடச் சொல்லுங்கள்.
இதெல்லாம் செய்தாலும், நம் குழந்தைகளுக்கு நாம் நல்லவர்களாக இருப்போம் என்று நம்பிக்கை ஏற்படுத்துவோம் அதேபோல் அவர்களையும் நமக்கு நல்லவர்களாக இருக்க வைப்பதற்கு முயற்சிகள் அனைத்தையும் செய்வோம் இன்ஷா அல்லாஹ்..!

நம்பிக்கையூட்டுங்கள் அவர்களின் தனித் தன்மையில் தலையிடமாட்டீர்கள் என்றும், அதே நேரத்தில் அத்துமீறல்கள் கண்டால் மவுனம் காக்க மாட்டீர்கள் என்றும் வெளிக்காட்டி விடுங்கள்..

இதைவிட இன்னும் சொல்லித்தர நீங்களும் இருக்கிறீர்கள் தானே சொல்லுங்களேன் பின்னுட்டம் வாயிலாக...

குறிப்பு : வீட்டிலிருக்கும் இண்டெர்நெட் இணைப்புக்கு பயன்படுத்தும் அகல அலைவரிசை இணைய அணுகல் - இணக்கி / வழிச்செயலி (ADSL modem / router) பாதுகாப்பும் அதன் பயன்பாடுகள் என்னவென்றும் அவசியம் நாம் யாவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதனைப் பற்றி விலாவாரியாக அடுத்தடுத்து பார்க்கத்தான் வேண்டுமா ?

- அபுஇபுறாஹிம்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More